Aandavane Kirubai Kooraai - Christking - Lyrics

Aandavane Kirubai Kooraai


Album : | Artist :
ஆண்டவனே கிருபை கூராய் எனக்
காதாரம் உன்றனின் பாதாரவிந்தம்

மீண்டெனின்மேல் தயை பூண்டருள் நாதா
ஈண்டுனின் தாள்பணிந்தேன் திருப்பாதா

துர்க்குணத்தி லுருவானேன் பொல்லாத்
தோஷியாய்ப் பேயவன் தோழனாய்ப் போனேன்
நற்குண மென்னில்நான் காணேன் - நித்ய
நாச மரண நரகுக்குள்ளானேன்
சற்குண மன்பு தயைமிகு தேவா
தாவிப் பிடித்தேனான் மேவிநீ காவா

பாவ ஊற்றெனதுள்ளம் மெய்யே பாவம்
பாய்வழி யென்செவி வாய் கண் கால் கையே
நோவென்னைப் பிசித்ததென் ஐயே - எனை
நோக்கி யுலகுசொல்லும் ஆறுதல் பொய்யே
ஏவை புத்திரனழு தேங்கல் நோக்காயோ
என் பாவச்சேற்றை விட்டென்னைத் தூக்காயோ

சாபத்துக்களாய்ப் போனேன் சீனாய்த்
தன்னிடி குமுறலின் சத்தங்கேட்டேனே
கோபத்தின் தீயைக்கண்டேனே - தேவ
கோஷ்ட முணர்ந்தே கலக்கமுற்றேனே
ஆபத்தில் நீ என் அடைக்கலம் தஞ்சம்
ஐயையோ எங்கோடும் என் ஏழைநெஞ்சம்

பாடெனக்காய்ப் பட்டாயன்றோ என்றன்
பத்தாநின்சாவு நான் சாவதற்கென்றோ
கேடென்னில் நிற்பதும் நன்றோ - என்னைக்
கேளாதிருக்க உன்றன் மனங்குன்றோ
நாடறியப் பாடு பட்டுயிர் தந்தாய்
நம்பினபேர்க்கா யுயிர்தங்கு சென்றாய்

Aandavane Kirubai Kooraai Aandavane Kirubai Kooraai Reviewed by Christking on January 21, 2018 Rating: 5
Powered by Blogger.