Yakkoppe Nee - யாக்கோபே நீ வேரூன்றுவாய் - Christking - Lyrics

Yakkoppe Nee - யாக்கோபே நீ வேரூன்றுவாய்

யாக்கோபே நீ வேரூன்றுவாய்
பூத்துக் குலுங்கிடுவாய்
காய்த்துக் கனி தருவாய்
பூமியெல்லாம் நிரப்பிடுவாய் இந்த

என் மகனே நீ வேரூன்றுவாய்

நானே காப்பாற்றுவேன்
நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
இரவும் பகலும் காத்துக் கொள்வேன் உன்னை
எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்

அருமையான மகன் அல்லவோ எனக்கு
பிரியமான பிள்ளையல்லவோ நீ
உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
உனக்காக என் இதயம் ஏங்குகின்றது

நுகங்களை முறித்துவிட்டேன்
கட்டுகளை அறுத்துவிட்டேன்
இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
எனக்கே ஊழியம் செய்திடுவாய்

புதிய கூர்மையான
போரடிக்கும் கருவியாக்குவேன் உன்னை
மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
குன்றுகளைத் தவிடு பொடியாக்குவாய்
Yakkoppe Nee - யாக்கோபே நீ வேரூன்றுவாய் Yakkoppe Nee - யாக்கோபே நீ வேரூன்றுவாய் Reviewed by Christking on June 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.