Deva nan ethinnal / தேவா நான் எதினால் விசேஷித்தவன் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Deva nan ethinnal / தேவா நான் எதினால் விசேஷித்தவன் - Tamil Christian Songs Lyrics

தேவா நான் எதினால் விசேஷித்தவன்
இராஜா நான் அதை தினம் யோசிப்பவன்
எதினால்? இது எதினால்?
நீர் என்னோடு வருவதினால்

மேகஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது
பாதை காட்ட பகலெல்லாம் கூடச் செல்லுது
அன்பான தேவன் என்னோடு வருவார்
அது போதும் என் வாழ்விலே

பகல்சென்று அந்தகாரம் சூழ்ந்து கொண்டது
பரிசுத்தமான அக்கினி ஸ்தம்பம் செல்லுது
ஆ..ஆ.. என் தேவன் தீர்ப்பார்
மங்காத அபிஷேகமே

தாகம் கொண்ட தேவஜனம் வானம் பார்க்குது
ஆவல் கொண்ட கன்மலையும் கூடச்செல்லுது
என் ஏக்கமெல்லாம் என் தேவன் தீர்ப்பார்
சந்தோஷம் நான் காணுவேன்

வாழ்க்கையிலே கசப்புக்கள் கலந்திட்டாலும்
பாசமுள்ள ஒரு மரம் கூட வருது
மாராவின் நீரை தேனாக மாற்றும்
என் நேசர் என்னோடுண்டு

தரிசித்து நடவாமல் விசுவாசிப்போம்
பரிசுத்தமாக நம்மை காத்துக்கொள்ளுவோம்
இம்மாணுவேலன் என் இயேசு ராஜன்
எந்நாளும் நம்மோடுண்டு


Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Deva nan ethinnal / தேவா நான் எதினால் விசேஷித்தவன் - Tamil Christian Songs Lyrics Deva nan ethinnal / தேவா நான் எதினால் விசேஷித்தவன் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on January 05, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.