Neer Thiranthal Adaipavan : Lyrics - Christking - Lyrics

    Neer Thiranthal Adaipavan : Lyrics

    நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
    நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை
    என் வாசலை அடைப்பவன் இல்லை
    இல்லை இல்லை இல்லை
    என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

    கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
    பூமியில் இல்லையே
    கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
    பூமியில் இல்லையே
    பலவானின் வில்லை உடைத்து
    கீழே தள்ளுகிறார்
    தள்ளாடும் யாவரையும்
    உயரத்தில் நிறுத்துகிறார்

    நாசியின் சுவாசத்தால் செங்கடலை
    அவர் இரண்டாய் பிளந்தவராம்
    பார்வோன் சேனையை தப்பவிடாமல்
    கடலில் அழித்தவராம்
    மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
    பஸ்கா ஆட்டுக்குட்டி
    வாதை எங்கள் கூடாரத்தை
    என்றும் அணுகாது

    தேவனை துதிக்கும் துதியாலே
    எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும்
    துதித்த போது சிறையும் அதிர்ந்தது
    துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம்
    திறந்த வாசல் நம் முன்னே
    கொடியை ஏற்றிடுவோம்

    Songs Description :
    Song : Neer Thiranthal Adaipavan
    Artist : Lukas Sekar
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Neer Thiranthal Adaipavan : Lyrics Neer Thiranthal Adaipavan : Lyrics Reviewed by Christking on August 31, 2016 Rating: 5
    Powered by Blogger.