Naan Unnai Vittu Vilaguvathillai - நான் உன்னை விட்டு விலகுவதில்லை - Christking - Lyrics

Naan Unnai Vittu Vilaguvathillai - நான் உன்னை விட்டு விலகுவதில்லை

நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன்

பயப்படாதே நீ மனமே - நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்

திகையாதே கலங்காதே மனமே - நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - உன்
கவலைகள் யாவையும் போக்கிடுவேன்

அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

நீதியின் வலக்கரத்தாலே உன்னை
தாங்குவேன் நான் அன்பினாலே
ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்
Naan Unnai Vittu Vilaguvathillai - நான் உன்னை விட்டு விலகுவதில்லை Naan Unnai Vittu Vilaguvathillai - நான் உன்னை விட்டு விலகுவதில்லை Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.