Suriyan Maranthu Anthakaram - சூரியன் மறந்து அந்தகாரம் - Christking - Lyrics

Suriyan Maranthu Anthakaram - சூரியன் மறந்து அந்தகாரம்

சூரியன் மறந்து அந்தகாரம் சூழ்ந்தது
சோர்ந்த என்தேகமும் அயர்ந்துமே
இளைப்பாறப்போகுது
தூயா கிருபைகூர்ந்து காருமையா

பகல் முழுவதும் பட்சமாய் என்னை பாதுகாத்தீரே
சகலதீமையுமகல வைத்தருள் நலமுந்தந்தீரே
சுவாமி உன்றன் பாதம் பணிகிறேன்

பாதகம் மிக புரிந்தேன் பரம நாயகா
பாவி நானிந்த நாளிலும் பல தீவினைசெய் தேனையா
கோபமின்றி என்பவம் பொறுத்திடுவாய்

ராவில் வரும் மோசமொன்றும் என்னைச் நேராமல்
பேயின் சர்ப்பனை தீய சொப்பனம் மனதில் நேராமல்
நேயா நின் நல்தூதர் கவால் தா

ஆத்துமம் சரீரம் எனக்கான யாவையும்
அப்பனுன் கையிலொப்புவித்து நான் அமர்ந்து தூங்குவேன்
ஐயனே உன் பொன்னடி சரணம்
Suriyan Maranthu Anthakaram - சூரியன் மறந்து அந்தகாரம் Suriyan Maranthu Anthakaram - சூரியன் மறந்து அந்தகாரம் Reviewed by Christking on May 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.