Devane Ummai - தேவனே உம்மை - Christking - Lyrics

    Devane Ummai - தேவனே உம்மை


    தேவனே உம்மை யாந் துத்தியஞ் செய்கிறோம்
    தேவரீர் கர்த்த னென் றெங்கும்பிரஸ் தாபிப்போம்.

    நித்திய தந்தையாம் நிர்மல னும்மையே
    நித்தம்பூ மண்டலம் நின்றுவ ணங்கிடும்.

    சம்மன சோருட சர்வசேனைகளும்
    சாவிலா மண்டல சக்திகள் யாவரும்

    சேராபீன் கேருபீன் சேர்ந்தங்கோய் வில்லாமல்
    சிந்தையாய் உந்தனின் சீர் புகழ் பாடுவார்.

    சேனையின் தேவனே, கர்த்தரே, நீர்மிக்க்
    சுத்தரே, சுத்தரே, சுத்தரே என்கிறார்.

    வானமும் பூமியும் உந்தனின் மாட்சியை
    வாகுடன் காட்டுமே வள்ளலே யென்கிறார்.

    மாட்சிமை பெற்றிடு மாவப் போஸ் தலரும்
    மாய்விலா உம்மையே தீர்க்கமாய்ப் போற்றுவார்.
    தீர்க்கரென் கின்றவச் சீர்பெற்ற சங்கமும்
    தெய்வமே உம்மையே தீர்க்கமாய்ப் போற்றுவார்

    வீரமாய் நின்றிட்ட உம்ரத்த சாட்சிகள்
    வீவிலா உம்மையே விண்ணதில் போற்றுவார்

    மட்டிலா மாட்சிமை பெற்றுள தந்தையை
    மாவணக் கம்பெறும் மைந்தனைப் போற்றுவார்

    தேற்றுதல் செய்திடுந் தூயமா ஆவியைத்
    தெய்வலோ கத்திலும் பூவிலும் போற்றுவார்.

    பூவெலாம் போயுள சுத்தமா சங்கமும்
    புண்ணியன் உம்மையே போற்றிப்பிரஸ் தாபிக்கும்

    மாகிறிஸ்து நீரல்லோ மகிமையின் ராஜன்
    மாய்வில்லாத் தந்தைக்கு நித்திய மைந்தன்

    நரரைநீர் மீட்டிட முன்வந்த பொழுது
    நற்கன்னி கர்ப்பதை வெறுத் தோட விலையே

    மரணத்தை வென்றிட்டு மாபக்தர் வசிக்க
    மைந்த னே திறந்திட்டீர் மோட்சத்தைச் சிறக்க

    திருந்ததை யென்போரின் திகழ்மாட்சி யதிலே
    தினமும்நீ ரிருக்கின்றீர் வலபக்கந்தனிலே.

    தரணியோர் எங்கட்குத் தகுந்தீர்ப்பு அளிக்கத்
    தாண்டிநீர் வருவீரென்றென்றுநம் புவோம்

    மாவிலை கொண்ட உம் ரத்தத்தால் மீட்டிட்ட
    மாந்தருக் கேதயை செய்திட வேண்டுவோம்

    எங்களை நித்திய உம்மகி மையிலே
    ஏகமாய்ச் சுத்தரோ டென்றும்நீர் சேர்ந்தீடும்

    அத்தனே ரட்சியும் ஐயன் உம்மாட்களை
    ஆசீர்வ தியுஞ்சு தந்தரந் தன்னைநீர்.

    என்றைக்கும் மாண்டிடும் இச்சனந் தன்னைநீர்
    எங்கும் உயர்ந்திடு மென்றுமை வேண்டுவோம்.

    இத்தினம் முற்றிலும் எப்பவஞ் செய்திடாது
    எங்களைக் காத்திட ஏகனே வேண்டுவோம்

    எங்களுக் கேதயை செய்திடும் ஐயாநீர்
    என்றைக்கும் உம்மையே நம்பியி ருக்கிறோம்.

    உம்மையே நம்பினான் உய்கின்றே னாதலால்
    ஒன்றிலுந் துன்பமே நேரவிடாதிரும்.


    Thaevanae Ummai Yaan Thuththiyanj Seykirom
    Thaevareer Karththa Nen Rangumpiras Thaapippom.

    Niththiya Thanthaiyaam Nirmala Nummaiyae
    Niththampoo Manndalam Nintuva Nangidum.

    Sammana Soruda Sarvasenaikalum
    Saavilaa Manndala Sakthikal Yaavarum

    Seraapeen Kaerupeen Sernthangay Villaamal
    Sinthaiyaay Unthanin Seer Pukal Paaduvaar.

    Senaiyin Thaevanae, Karththarae, Neermikk
    Suththarae, Suththarae, Suththarae Enkiraar.

    Vaanamum Poomiyum Unthanin Maatchiyai
    Vaakudan Kaattumae Vallalae Yenkiraar.

    Maatchimai Pettidu Maavap Pos Thalarum
    Maayvilaa Ummaiyae Theerkkamaayp Pottuvaar.

    Theerkkaren Kintavach Seerpetta Sangamum
    Theyvamae Ummaiyae Theerkkamaayp Pottuvaar

    Veeramaay Nintitta Umraththa Saatchikal
    Veevilaa Ummaiyae Vinnnathil Pottuvaar

    Mattilaa Maatchimai Pettula Thanthaiyai
    Maavanak Kamperum Mainthanaip Pottuvaar

    Thaettuthal Seythidun Thooyamaa Aaviyaith
    Theyvalo Kaththilum Poovilum Pottuvaar.

    Poovelaam Poyula Suththamaa Sangamum
    Punnnniyan Ummaiyae Pottippiras Thaapikkum

    Maakiristhu Neerallo Makimaiyin Raajan
    Maayvillaath Thanthaikku Niththiya Mainthan

    Nararaineer Meettida Munvantha Poluthu
    Narkanni Karppathai Veruth Thoda Vilaiyae

    Maranaththai Ventittu Maapakthar Vasikka
    Maintha Nae Thiranthittir Motchaththaich Sirakka

    Thirunthathai Yenporin Thikalmaatchi Yathilae
    Thinamumnee Rirukkinteer Valapakkanthanilae.

    Tharanniyor Engatkuth Thakuntheerppu Alikkath
    Thaanntineer Varuveerententunam Puvom

    Maavilai Konnda Um Raththaththaal Meettitta
    Maantharuk Kaethayai Seythida Vaennduvom

    Engalai Niththiya Ummaki Maiyilae
    Aekamaaych Suththaro Dentumneer Serntheedum

    Aththanae Ratchiyum Aiyan Ummaatkalai
    Aaseerva Thiyunju Thantharan Thannaineer.

    Entaikkum Maanndidum Ichchanan Thannaineer
    Engum Uyarnthidu Mentumai Vaennduvom.

    Iththinam Muttilum Eppavanj Seythidaathu
    Engalaik Kaaththida Aekanae Vaennduvom

    Engaluk Kaethayai Seythidum Aiyaaneer
    Entaikkum Ummaiyae Nampiyi Rukkirom.

    Ummaiyae Nampinaan Uykinte Naathalaal
    Ontilun Thunpamae Naeravidaathirum.

    Devane Ummai - தேவனே உம்மை Devane Ummai - தேவனே உம்மை Reviewed by Christking on July 01, 2020 Rating: 5
    Powered by Blogger.