Paaduvaen Magizhvaen - Jebathotta Jeyageethangal Lyrics - Christking - Lyrics

    Paaduvaen Magizhvaen - Jebathotta Jeyageethangal Lyrics


    Paaduvaen Magizhvaen (vom)
    Kondaduvaen(vom)
    Appa Samoogathil padi
    Magizhndhu kondaduvom

    1. Akkini madhil neera
    Aarudhal Mazhai neerae
    Ekkatil thunai Neerae
    Irulil Velicham Neerae
    Nandri Nandri Nandri -2

    2. Thuyarneekum maruthuvarae
    En thudhiku pathirarae
    Belanellam neerdhanaiya
    Piriyamum neerdhanaiya –(En)

    3. Kalvari Siluvaiyinal
    En Sabangal Udaindhadhaiya
    Aabiragamin aasirvadhangal –Indha
    Adimaiku Kidaithadhaiya

    4. Yesuvae Umm rathathal ennai
    Needhimanai matrineerae
    Parisutha aavi thandhu –um
    Anbai ootrineerae

    5. Ummaiyae nambivazhvadhal
    Umakae sondhamanaen – En
    Uyirana Kristhu vandhadhal –um
    Uravukul vandhuvittaen

    6. Ivulaga pokkinbadi naan
    Vazhndhen palanatkal
    Ummodu yenaitheeraiya –Um
    Migundha irakathinal

    7. Vaazhvu tharum ootru Neerae
    Vazhikattum deepam Neerae
    Puyalil pugalidamae –kadum
    Veyillil kulir nizhalae

    8. Perinba neerodaiyil
    En dhagam thanipavarae
    Umadhu peranbu –adhu
    Ethanai melanadhu
    பாடுவேன் மகிழ்வேன்(வோம்)
    கொண்டாடுவேன்(வோம்)
    அப்பா சமுகத்தில் பாடி
    மகிழ்ந்து கொண்டாடுவேன்(வோம்)

    1. அக்கினி மதில் நீரே
    ஆறுதல் மழை நீரே
    இக்கட்டில் துணை நீரே
    இருளில் வெளிச்சம் நீரே - நன்றி

    2. துயர் நீக்கும் மருத்துவரே
    என் துதிக்குப் பாத்திரரே
    பெலனெல்லாம் நீர்தானையா
    பிரியமும் நீர்தானையா - (என்)

    3. கல்வாரி சிலுவையினால் - என்
    சாபங்கள் உடைந்ததையா
    ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் - இந்த
    அடிமைக்கு கிடைத்ததையா

    4. இயேசுவே உம் இரத்தத்தால்
    என்னை நீதிமானாய் மாற்றினீரே
    பரிசுத்த ஆவி தந்து - உம்
    அன்பை ஊற்றினீரே

    5. உம்மையே நம்பி வாழ்வதால்
    உமக்கே சொந்தமானேன் - என்
    உயிரான கிறிஸ்து வந்ததால் - உம்
    உறவுக்குள் வந்துவிட்டேன்

    6. இவ்வுலகப் போக்கின்படி
    நான் வாழ்ந்தேன் பலநாட்கள்
    உம்மோடு இணைத்தீரைய்யா - உம்
    மிகுந்த இரக்கத்தினால்

    7. வாழ்வு தரும் ஊற்று நீரே
    வழிகாட்டும் தீபம் நீரே
    புயலில் புகலிடமே - கடும்
    வெயிலில் குளிர் நிழலே

    8. பேரின்ப நீரோடையில்
    என் தாகம் தணிப்பவரே
    உமது பேரன்பு - அது
    எத்தனை மேலானது

    Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,P
    Paaduvaen Magizhvaen - Jebathotta Jeyageethangal Lyrics Paaduvaen Magizhvaen - Jebathotta Jeyageethangal Lyrics Reviewed by Christking on February 03, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.