Siluvaiyin Nizhalil Anudhinam Adiyaan : Lyrics - Christking - Lyrics

    Siluvaiyin Nizhalil Anudhinam Adiyaan : Lyrics


    சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான்
    சாய்ந்திளைப் பாறிடுவேன் - ஆ.. ஆ..
    சிலுவையின் அன்பின் மறைவில்
    கிருபையின் இனிய நிழலில்
    ஆத்தும நேசரின் அருகில்
    அடைகிறேன் ஆறுதல் மனதில்

    1. பாவ பார சுமையதால் சோர்ந்து
    தளர்ந்த என் ஜீவியமே - ஆ ஆ
    சிலுவையண்டை வந்ததினால்
    சிறந்த சந்தோஷங் கண்டதினால்
    இளைப்படையாது மேலோகம்
    ஏகுவேன் பறந்தே வேகம்

    2. எவ்விதக் கொடிய இடறுக்கும் அஞ்சேன்
    இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ ஆ
    அவனியில் வியாகுலம் வந்தால்
    அவரையே நான் அண்டிக்கொண்டால்
    அலைமிக மோதிடும் அந்நாள்
    ஆறுதல் அளிப்பதாய் சொன்னார்

    3. இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன்
    இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ ஆ
    திருமறை இன்னிசை நாதம்
    தேனிலும் இனிய வேதம்
    தருமெனக்கானந்த சந்தோஷம்
    தீர்க்குமென் இதயத்தின் தோஷம்

    Songs Description :
    Song : Siluviyin Nilailil Anudhaniyam Adiyan
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Siluvaiyin Nizhalil Anudhinam Adiyaan : Lyrics Siluvaiyin Nizhalil Anudhinam Adiyaan : Lyrics Reviewed by Christking on December 02, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.