Enna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் - Christking - Lyrics

Enna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்

Album : | Artist :

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும்
உமக்கு நன்றி சொல்வேன்
உமது புகழ் பாடுவேன்

தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே
தூய மகனாக்கினீர்
துதிக்கும் மகளாக்கினீர் - இராஜா

இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்
இரவும் பகலும் புகழ் பாடுவேன் - என்ன

ஆவியினாலே அன்பையே ஊற்றி
பாவங்கள் நீக்கினீரே
சுபாவங்கள் மாற்றினீரே - இராஜா

இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை
எதிர்நோக்கி ஓடுகிறேன் -இயேசு
நினைத்துப் பாடுகிறேன் - இராஜா

இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி
உறவாடச் செய்தீரையா
உம்மோடு இணைத்தீரையா

மரணத்தை அழித்து அழியா ஜீவனை
அறிமுகப்படுத்தினீரே
அறிவிக்க அழைத்தீரே - இதை

Enna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் Enna Nadanthalum Yaar - என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் Reviewed by Christking on March 12, 2018 Rating: 5
Powered by Blogger.