Neer Thiranthal Adaipavan - நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை - Christking - Lyrics

Neer Thiranthal Adaipavan - நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை

நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை
நீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என் வாசலை அடைப்பவன் இல்லை
இல்லை இல்லை இல்லை
என்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை

கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்
பூமியில் இல்லையே
கர்த்தரை போல வல்லமை உள்ளவர்
பூமியில் இல்லையே
பலவானின் வில்லை உடைத்து
கீழே தள்ளுகிறார்
தள்ளாடும் யாவரையும்
உயரத்தில் நிறுத்துகிறார்

நாசியின் சுவாசத்தால் செங்கடலை
அவர் இரண்டாய் பிளந்தவராம்
பார்வோன் சேனையை தப்பவிடாமல்
கடலில் அழித்தவராம்
மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்
பஸ்கா ஆட்டுக்குட்டி
வாதை எங்கள் கூடாரத்தை
என்றும் அணுகாது

தேவனை துதிக்கும் துதியாலே
எரிக்கோ விழுந்தது-பவுலும் சீலாவும்
துதித்த போது சிறையும் அதிர்ந்தது
துதியாலே சாத்தானை கீழே தள்ளிவிடுவோம்
திறந்த வாசல் நம் முன்னே
கொடியை ஏற்றிடுவோம்
Neer Thiranthal Adaipavan - நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை Neer Thiranthal Adaipavan - நீர் திறந்தால் அடைப்பவன் இல்லை Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.