Thuthi Paduvai Nenjame - துதிபாடுவாய் நெஞ்சமே - Christking - Lyrics

    Thuthi Paduvai Nenjame - துதிபாடுவாய் நெஞ்சமே

    துதிபாடுவாய் நெஞ்சமே இயேசுவை
    அவர் துதி சொல்லி வரவே
    தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே

    முன் அறிந்தார் முன் குறித்தார்
    நம்மை அழைத்தார்
    மகிமைப்படுத்தினார்- இன்னும்
    மகிமைப்படுத்துவார்

    பூமியின் மண்ணை மரக்காலால்
    அளந்தவரும் அவரே- வானங்களை
    திரைப்போல விரித்தவரும் அவரே
    நட்சத்திரங்களைப் பெயர் சொல்லி
    அழைத்தவரும் அவரே
    உன்னையும் என்னையும்
    உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே

    வானம் திறந்து மன்னாவால்
    போஷிப்பவரும் அவரே- செங்கடல்
    தனை இரண்டாக பிளந்தவரும் அவரே
    மோசேயின் கைக்கோலால்
    அற்புதங்கள் செய்தவரே
    உலகம் முடியும் வரை துணையாய்
    நம்முடன் இருப்பவரே
    Thuthi Paduvai Nenjame - துதிபாடுவாய் நெஞ்சமே Thuthi Paduvai Nenjame - துதிபாடுவாய் நெஞ்சமே Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.