Ullam Udainthu - உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து - Christking - Lyrics

    Ullam Udainthu - உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து

    உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து
    பாரங்களால் நான் சோர்ந்து நிற்கையில்
    உம்முகத்தை நான் தேடும் ஜெபவேளை
    உம் பிரசன்னம் நான் வாஞ்சித்திருப்பேன்

    உயர்த்துவீர் கன்மலைகள்மேல் நிற்க
    உயர்த்துவீர் அலைகள் கடந்தே
    ஏந்திசுமப்பேன் தப்புவிப்பேன் உன்னை
    என்றுரைத்தீர் நான் உம்மை நம்புவேன்

    களைப்படைந்து சோறுவோர் அநேகர்
    வாலிபரும் இடறி போவாரே
    கர்த்தருக்கு காத்திருந்து நிற்பவர்
    கழுகை போல் பெலன் அடைவாரே

    மரண பள்ளத்தாக்கினில் நடந்து
    பொல்லாப்பை கண்டு அஞ்சாதிருப்பேன்
    எனக்கு ஜீவன் உள்ள நாட்களெல்லாம்
    நன்மை கிருபை என்றும் தொடரும்
    Ullam Udainthu - உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து Ullam Udainthu - உள்ளம் உடைந்து சோகத்தில் அமிழ்ந்து Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.