Uyirinum Melaanathu - உயிருனும் மேலானது - Christking - Lyrics

Uyirinum Melaanathu - உயிருனும் மேலானது

உயிருனும் மேலானது
உந்தன் பேரன்பு
எனவே உயிர் இருக்கும் வரை

உம்மைத்தானே உறுதியுடன்
தினமும் பற்றிக் கொண்டேன்
உம் நிழலில் தானே களிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதய்யா

போற்றி போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகின்றேன் உயிரி

பகலெல்லாம் பாடுகின்றேன்
இரவெல்லாம் தியானிக்கின்றேன்
ஏங்குதய்யா என் இதயம்
திருமுகம் காண வேண்டும்
எப்போது வருவீரையா எதிர்நோக்கி ஓடுகிறேன்
உம் நினைவால் சோகமானேன்
எப்போது வருவீரையா போற்றி

நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்
உம் சமூகம் ஓடி வந்தேன் இதுதானே என் விருந்து
உம் வசனம் தியானிக்கிறேன்
அதுதானே என் மருந்து
மறுரூபமாகணும் மகிமையில் மூழ்கணுமே
Uyirinum Melaanathu - உயிருனும் மேலானது Uyirinum Melaanathu - உயிருனும் மேலானது Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.