Yesuvin Othukkil Naan - இயேசுவின் ஒதுக்கில் நான் - Christking - Lyrics

Yesuvin Othukkil Naan - இயேசுவின் ஒதுக்கில் நான்

இயேசுவின் ஒதுக்கில் நான் இறக்க அருள்புரியும்

நேசபரனே இந்த நீசன் கெஞ்சிக் கேட்கிறேன்

நாள் ஓடும் சாவு சேரும் நாதா எந்த நேரமோ
பாழுடல் விட்டு ஜீவன் பறக்கும் வேளையறியேன்

இயேசுவை விட்டென் சாவு என்னைப் பிரித்திடாது
நீசன் அவரில் நின்றென் நேசரேயென்று சொல்வேன்

என் ஜீவன் இன்றுபோயும் என் மீட்பரால் நான் பாக்யன்
என் சாவு நாளை வந்தும் யேசுவுக்குள் நான் நிற்பேன்

நீர் என்னை இங்கே வைக்கும் நேரமட்டும் உமக்கே
சீராக நான் பிழைக்கத் தேவா எனை நடத்தும்

சீர்ப்படத் தாமதமேன் ஜீவவழி பிடிப்பேன்
ஈறந்தத்தை நினைப்பேன் என் தீபமே சோடிப்பேன்

யேசுவின் நீதியால் நான் என்பாவத்தை மூடுவேன்
மாசற்றுச் சுத்தமாவேன் மனதில் விசுவாசித்து

ஆண்டவரைங் காயங்கள் அடியேனின் அடைக்கலம்
மாண்டோர் அவர் நான் மாளேன் மரணம் எனது பாக்கியம்
Yesuvin Othukkil Naan - இயேசுவின் ஒதுக்கில் நான் Yesuvin Othukkil Naan - இயேசுவின் ஒதுக்கில் நான் Reviewed by Christking on June 03, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.