Aaviyai Arulumae Suvaamee - ஆவியை அருளுமே சுவாமீ - Christking - Lyrics

    Aaviyai Arulumae Suvaamee - ஆவியை அருளுமே சுவாமீ


    ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்
    காயுர் கொடுத்த வானத்தினரசே

    1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
    நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
    முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
    முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ?
    — ஆவியை

    2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
    பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் ,
    தேவ சமாதானம் , நற்குணம் , தயவு,
    திட விசுவாசம் சிறிதெனுமில்லை
    — ஆவியை

    3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;
    திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,
    பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,
    பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்
    — ஆவியை


    Aaviyai Arulumae , Suvaamee , Enak
    Kaayur Koduththa Vaanaththinarase

    1. Narkani Thaetivarung Kaalanga Lallavo?
    Naanoru Kaniyatta Paalmara Mallavo?
    Murkani Mukangaannaa Vempayi Rallavo?
    Mulunenjam Vilaivatta Uvarnila Mallavo?
    — Aaviyai

    2. Paavikku Aaviyin Kaniyenunj Sinaekam,
    Parama Santhosham , Neetiya Saantham ,
    Thaeva Samaathaanam , Narkunam , Thayavu,
    Thida Visuvaasam Sirithenumillai
    — Aaviyai

    3. Theepaththuk Kennnaiyaich Seekkiram Oottum;
    Thiri Yaviyaamalae Theenntiyae Yaettum ,
    Paava Asoosangal Vilakkiyae Maattum ,
    Parisuththavaran Thanthen Kuraikalaith Theerum
    — Aaviyai

    Aaviyai Arulumae Suvaamee - ஆவியை அருளுமே சுவாமீ Aaviyai Arulumae Suvaamee - ஆவியை அருளுமே சுவாமீ Reviewed by Christking on July 22, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.