Kaalam Pani Kaalam Vaanil Oli Kolam - Christking - Lyrics

    Kaalam Pani Kaalam Vaanil Oli Kolam


    காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
    ஊரின் ஒரு ஓரம் இரவின் நடு நேரம்
    பாலன் பிறந்தார் அன்று
    பாசத் திருநாள் இன்று

    தீபச் சுடர் ஏந்துங்கள் பாலன் முகம் காணுங்கள்
    காலம் பனிக்காலம் வானில் ஒளிக் கோலம்
    பாசத் திருநாள் இன்று

    1. பூக்களின் எழில் புன்னகை தனில்
    இறைமகன் பாசம் காணலாம்
    நீரலை எழும் நீர்களின் தனில்
    இறைமகன் நேசம் காணலாம்

    பகலிலே வேகமாய்
    இரவிலே தீபமாய்
    காற்றும் இறை நாமமே
    கலங்காதே நாம் வாழலாம் — காலம்

    2. காவியம் புகழ் பரமனின் அருள்
    மழைத் தரும் மேகம் ஆகுமே
    பாலகன் பதம் பணிந்திடும் மனம்
    ஒளி விடும் தீபம் ஆகுமே

    அமைதியை செல்வமாய்
    அருளையே அமுதமாய்
    தாரும் இறை இயேசுவே
    எம் வாழ்வு ஒளி வீசுமே — காலம்


    Kaalam Panikkaalam Vaanil Olik Kolam
    Oorin Oru Oram Iravin Nadu Naeram
    Paalan Piranthaar Antu
    Paasath Thirunaal Intu

    Theepach Sudar Aenthungal Paalan Mukam Kaanungal
    Kaalam Panikkaalam Vaanil Olik Kolam
    Paasath Thirunaal Intu

    1. Pookkalin Elil Punnakai Thanil
    Iraimakan Paasam Kaanalaam
    Neeralai Elum Neerkalin Thanil
    Iraimakan Naesam Kaanalaam

    Pakalilae Vaekamaay
    Iravilae Theepamaay
    Kaattum Irai Naamamae
    Kalangaathae Naam Vaalalaam — Kaalam

    2. Kaaviyam Pukal Paramanin Arul
    Malaith Tharum Maekam Aakumae
    Paalakan Patham Panninthidum Manam
    Oli Vidum Theepam Aakumae

    Amaithiyai Selvamaay
    Arulaiyae Amuthamaay
    Thaarum Irai Yesuvae
    Em Vaalvu Oli Veesumae — Kaalam

    Kaalam Pani Kaalam Vaanil Oli Kolam Kaalam Pani Kaalam Vaanil Oli Kolam Reviewed by Christking on September 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.