Aathi Pitha Kumaran - ஆதி பிதா குமாரன் | Keerthanai | Cathrine Ebenesar - Christking - Lyrics

    Aathi Pitha Kumaran - ஆதி பிதா குமாரன் | Keerthanai | Cathrine Ebenesar


    பல்லவி
    ஆதி பிதா குமாரன் – ஆவி திரியேகர்க்கு
    அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு அனவரதமும் தோத்ரம்.

    அனுபல்லவி
    நீத்த முதற் பொருளாய் நின்றருள் சர்வேசன் ,
    நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன் ,
    நிறைந்த சத்திய ஞான மனோகர
    உறைந்த நித்திய வேதா குணாகர,
    நீடு வாரி திரை சூழ மேதினியை
    மூடு பாவ இருள் ஓடவே அருள் செய் .-ஆதி

    சரணங்கள்
    எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள்
    என்றென்றைக்கும் பணிபாதர் ,
    துங்கமா மறைப்பிர போதர்-கடைசி நடு
    சோதனைசெய் அதி நீதர்,
    பன் ஞானம்,சம்பூரணம் ,பரிசுத்தம் ,நீதி என்னும்
    பங்கில்லான் , தாபம் இல்லான் ,பகர்அடி முடிவில்லான்
    பண்பதாய்சு யம்பு விவேகன்,
    அன்பிரக்கத யாளப்பிரவாகன்
    பார்தலத்தில் சிருஷ்டிப்பு , மீட்பு ,பரி
    பாலனைத்தையும் பண்பாய் நடத்தி , அருள் .- ஆதி

    நீதியின் செங்கோல் கைக்கொண்டு -நடத்தினால் நாம்
    நீணலத்தில்லாமல் அழிந்து ,
    தீதறு நரகில் தள்ளுண்டு -மடிவோ மென்று
    தேவ திருவுளம் உணர்ந்து,
    பாதகர்க் குயிர் தந்த பாலன் ஏசுவைக் கொண்டு
    பரண் எங்கள்மிசை தயை வைத்தனர் ;இது நன்று
    பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம் ,
    இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
    பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
    சூரியன் முன் இருள் போலவே சிதறும் .- ஆதி


    Pallavi
    Aathi Pithaa Kumaaran - Aavi Thiriyaekarkku
    Anavarathamum Thothram!- Thiriyaekarkku Anavarathamum Thothram.

    Anupallavi
    Neeththa Muthar Porulaay Nintarul Sarvaesan ,
    Nithamum Panninthavarkal Iruthayamalar Vaasan ,
    Niraintha Saththiya Njaana Manokara
    Uraintha Niththiya Vaethaa Kunnaakara,
    Needu Vaari Thirai Soola Maethiniyai
    Moodu Paava Irul Odavae Arul Sey .-aathi

    Saranangal
    Enganum Niraintha Naathar - Parisuththarkal
    Ententaikkum Pannipaathar ,
    Thungamaa Maraippira Pothar-kataisi Nadu
    Sothanaisey Athi Neethar,
    Pan Njaanam,sampooranam ,parisuththam ,neethi Ennum
    Pangillaan , Thaapam Illaan ,pakarati Mutivillaan
    Pannpathaaysu Yampu Vivaekan,
    Anpirakkatha Yaalappiravaakan
    Paarthalaththil Sirushtippu , Meetpu ,pari
    Paalanaiththaiyum Pannpaay Nadaththi , Arul .- Aathi

    Neethiyin Sengal Kaikkonndu -nadaththinaal Naam
    Neenalaththillaamal Alinthu ,
    Theethatru Narakil Thallunndu -mativo Mentu
    Thaeva Thiruvulam Unarnthu,
    Paathakark Kuyir Thantha Paalan Aesuvaik Kenndu
    Parann Engalmisai Thayai Vaiththanar ;ithu Nantu
    Pakarntha Thannati Yaarkkutru Sanjalam ,
    Itainjal Vantha Pothae Thayavaakaiyil
    Paaril Naeridum Anjnjaana Sethamuthar
    Sooriyan Mun Irul Polavae Sitharum .- Aathi



    Aathi Pitha Kumaran - ஆதி பிதா குமாரன் | Keerthanai | Cathrine Ebenesar Aathi Pitha Kumaran - ஆதி பிதா குமாரன் | Keerthanai | Cathrine Ebenesar Reviewed by Christking on December 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.