Nee Illatha Ullam Song Lyrics - Christking - Lyrics

    Nee Illatha Ullam Song Lyrics


    நீ இல்லாத உள்ளம் ஓர் பாலைவனம்

    எந்நாளும் உனக்காக ஏங்கும் மனம் (2)

    இறைவா இறைவா இறைவா இறைவா

    மழையாக வந்தும் மனம் மீது நின்றும் நனையாத நிலமாகினேன்

    ஒளியாக நிறைந்தும் வாழ்வோடு இணைந்தும்

    விடிவில்லா இரவாகினேன் (2)

    உயிரூட்டும் அருள்மேகம் எனைச் சூழுமோ

    வாழ்வேற்றும் ஒளிவெள்ளம் எனை ஆளுமோ (2) –இறைவா

    கண்ணீரில் மூழ்கி போராடும் நிலைபோல்

    தவிக்கின்றேன் உனைத் தேடியே

    போர் வந்த காலம் துடிக்கின்ற புவிபோல்

    அழுகின்றேன் துணை நாடியே (2)

    எதனாலும் நிறையாத வெறுமையிது – உன்

    அருளின்றி துயிலாத இதயம் இது (2) –இறைவா


    Nee Illaatha Ullam or Paalaivanam

    Ennaalum Unakkaaka Aengum Manam (2)

    Iraivaa Iraivaa Iraivaa Iraivaa

    Malaiyaaka Vanthum Manam Meethu Nintum Nanaiyaatha Nilamaakinaen

    Oliyaaka Nirainthum Vaalvodu Innainthum

    Vitivillaa Iravaakinaen (2)

    Uyiroottum Arulmaekam Enaich Soolumo

    Vaalvaettum Olivellam Enai Aalumo (2) –iraivaa

    Kannnneeril Moolki Poraadum Nilaipol

    Thavikkinten Unaith Thaetiyae

    Por Vantha Kaalam Thutikkinta Puvipol

    Alukinten Thunnai Naatiyae (2)

    Ethanaalum Niraiyaatha Verumaiyithu – Un

    Arulinti Thuyilaatha Ithayam Ithu (2) –iraivaa

    Nee Illatha Ullam Song Lyrics Nee Illatha Ullam Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.