Ninthaiyum Kodiya Vethanaiyum Song Lyrics - Christking - Lyrics

    Ninthaiyum Kodiya Vethanaiyum Song Lyrics


    நிந்தையும் கொடிய வேதனையும்
    நிறைந்துள்ள உம் திருப்பாடுகளை
    சிந்தையில் கொண்டு தியானிக்கவே
    தினம் அருள் புரிவீர் ஆண்டவரே
    சிலுவையிலேதான் மீட்சியுண்டு தேடும் வானக மாட்சியுண்டு

    1. இயேசுவை சிலுவையில் அறையுமென்றோம்
    இடியெனக் கூக்குரல் எழுப்பி நின்றோம்
    மாசற்ற செம்மறி ஆனவர்க்கு
    மரண தண்டனையாம் விதித்து நின்றோம்
    அவரோ மௌனம் காத்துநின்றார்
    அகமுவந்ததனை ஏற்றுக்கொண்டார்
    –சிலுவையிலே

    2. பாவத்தின் சுமையாம் சிலுவைதனை
    பரமனின் திருவுளம் நிறைவுறவே
    ஆவலாய்த் தோளில் சுமந்து சென்றார்
    ஆண்டவர் கல்வாரி மலை நோக்கி
    எனைப்பின் செல்பவன் தனை மறுத்து
    சிலுவையை எடுத்துப் பின் செல்கவென்றார்
    –சிலுவையிலே

    3. சிலுவையின் பாரம் அழுத்தியதால்
    திருமகன் தரையில் விழலானார்
    வலுவற்ற அடியோர் எழுந்திடவே
    வல்லப தேவா வரமருள்வீர்
    எமைப் பலப்படுத்தும் அவராலே
    எல்லாம் செய்திடக் கூடுமன்றோ
    –சிலுவையிலே

    4. உதிரம் வியர்வைத் தூசியினால்
    உருவிழந்திருந்த தன் மகனை
    எதிர்கொண்டு வந்த அன்னை மனம்
    இயம்பருந் துயரால் கலங்க வைத்தோம்
    அந்நிய காலம் வரையெங்கள்
    அடைக்கலமாய் நீ இருந்திடம்மா
    –சிலுவையிலே

    5. உம் திருச்சிலுவையைச் சுமந்து செல்ல
    உதவிய சீமோன் போல் யாமும்
    எம் அயலார்க்குத் தயங்காமல்
    என்றுமே உதவிடச் செய்தருள்வீர்
    நிரந்தரமாகப் பிறரன்பில் நிலைத்திடும்
    வரம் தர வேண்டுகின்றோம்
    –சிலுவையிலே

    6. துகள்படிந்திருந்த திருமுகத்தைத்
    துணிந்து வெரோணிக்காள் துடைக்க வந்தாள்
    இகமென்ன சொல்லும் என நினைந்து
    இழந்திடலாமோ விசுவாசம்
    இயேசுவை மனிதர் முன் ஏற்றுக்கொள்வோர்
    எய்துவர் அழியாப் பேரின்பம்
    –சிலுவையிலே

    7. மீண்டும் மீண்டும் பாவத்திலே
    விழுந்திடும் பாவியை மீட்டிடவோ
    ஈடிணையில்லா இறைமகனார்
    இவ்விதம் புழுதியில் விழலானார்
    நமை நிதம் இறைவன் மன்னிப்பதால்
    நாமும் பிறரை மன்னிப்போம்
    –சிலுவையிலே

    8. எங்கணும் நன்மை செய்தவர்க்கு
    ஏனிந்தக் கோலம் என வருந்திப்
    பொங்கிடும் கடல்போல் அழுதரற்றிப்
    புண்ணிய மாதரும் புலம்பினரே
    அழுகின்ற பேர்கள் பேறுபெற்றோர்
    ஏனெனில் ஆறுதல் அடைந்திடுவர்
    –சிலுவையிலே

    9. அளவற்ற களைப்போ பெருந்துயரோ
    அடியற்ற மரம்போல் விழலானார்
    உளந்தொறும் தாழ்ச்சி தழைத்திடவே
    உயர்பரன் அடிமை போல் விழலானார்
    தயையுயர்த்திடுவோன் தாழ்வடைவான்
    தனைத் தாழ்த்திடுவோன் உயர்வடைவான்
    –சிலுவையிலே

    10. உடையினை சேவகர் பிடித்திழுத்து
    உரித்திடும் வேளை காயமெல்லாம்
    மடைதிறந்தோடும் வெள்ளமென
    மறுபடி உதிரம் சொரிந்ததையோ
    அந்நியரும் வழிப்போக்கரும் நாம்
    அடக்குவோம் தீய ஆசைகளை
    –சிலுவையிலே

    11. கழுமரம் என்ற சிலுவையிலே
    களங்கமில்லாத இறைமகனை
    விழுமிய நலம் பல புரிந்தவரை
    வெறுத்திருப்பாணியால் அறைந்து வைத்தோம்
    ஒரு கணமேனும் இயேசுவேயாம்
    உமைப் பிரியாமல் வாழச் செய்வீர்
    –சிலுவையிலே

    12. நண்பனுக்காக தன்னுயிரை
    நல்குவதினுமேலான அன்பு
    கொண்டவர் யாருமே இல்லையன்றோ?
    கொடுத்தார் இயேசு தம் உயிர் நமக்காய்
    தமையன்பு செய்தார் நமக்காக
    தமைமுழுதும் அவர் கையளித்தார்
    –சிலுவையிலே

    13. மண்ணில் கோதுமை மணி விழுந்து
    மடிந்தால் தானே பலன் அளிக்கும்
    விண்ணில் வாழ்வு நமக்கருள
    விருப்புடன் இயேசு உயிர்துறந்தார்
    வியாகுல அன்னை மடிவளரும்
    மீட்பரே எம்மைக் காத்தருள்வீர்
    –சிலுவையிலே

    14. உலகின் ஒளியாய்த் தோன்றியவர்
    ஒரு கல்லறையுள் அடங்கிவிட்டார்
    விலகும் மரண இருள் திரையும்
    விளங்கும் கிறிஸ்துவின் அருள் ஒளியால்
    கிறிஸ்துவே எனக்கு உயிராகும்
    மரணம் எனக்கு ஆதாயம்
    –சிலுவையிலே


    Ninthaiyum Kotiya Vaethanaiyum
    Nirainthulla Um Thiruppaadukalai
    Sinthaiyil Konndu Thiyaanikkavae
    Thinam Arul Puriveer Aanndavarae
    Siluvaiyilaethaan Meetchiyunndu
    Thaedum Vaanaka Maatchiyunndu

    1. Yesuvai Siluvaiyil Araiyumentom
    Itiyenak Kookkural Eluppi Nintom
    Maasatta Semmari Aanavarkku
    Marana Thanndanaiyaam Vithiththu Nintom
    Avaro Maunam Kaaththunintar
    Akamuvanthathanai Aettukkonndaar
    – Siluvaiyilae

    2. Paavaththin Sumaiyaam Siluvaithanai
    Paramanin Thiruvulam Niraivuravae
    Aavalaayth Tholil Sumanthu Sentar
    Aanndavar Kalvaari Malai Nnokki
    Enaippin Selpavan Thanai Maruththu
    Siluvaiyai Eduththup Pin Selkaventar
    – Siluvaiyilae

    3. Siluvaiyin Paaram Aluththiyathaal
    Thirumakan Tharaiyil Vilalaanaar
    Valuvatta Atiyor Elunthidavae
    Vallapa Thaevaa Varamarulveer
    Emaip Palappaduththum Avaraalae
    Ellaam Seythidak Koodumanto
    – Siluvaiyilae

    4. Uthiram Viyarvaith Thoosiyinaal
    Uruvilanthiruntha Than Makanai
    Ethirkonndu Vantha Annai Manam
    Iyamparun Thuyaraal Kalanga Vaiththom
    Anniya Kaalam Varaiyengal
    Ataikkalamaay Nee Irunthidammaa
    – Siluvaiyilae

    5. Um Thiruchchiluvaiyaich Sumanthu Sella
    Uthaviya Seemon Pol Yaamum
    Em Ayalaarkkuth Thayangaamal
    Entumae Uthavidach Seytharulveer
    Nirantharamaakap Piraranpil Nilaiththidum
    Varam Thara Vaenndukintom
    – Siluvaiyilae

    6. Thukalpatinthiruntha Thirumukaththaith
    Thunninthu Veronnikkaal Thutaikka Vanthaal
    Ikamenna Sollum Ena Ninainthu
    Ilanthidalaamo Visuvaasam
    Yesuvai Manithar Mun Aettukkolvor
    Eythuvar Aliyaap Paerinpam
    – Siluvaiyilae

    7. Meenndum Meenndum Paavaththilae
    Vilunthidum Paaviyai Meettidavo
    Eetinnaiyillaa Iraimakanaar
    Ivvitham Puluthiyil Vilalaanaar
    Namai Nitham Iraivan Mannippathaal
    Naamum Pirarai Mannippom
    – Siluvaiyilae

    8. Enganum Nanmai Seythavarkku
    Aeninthak Kolam Ena Varunthip
    Pongidum Kadalpol Alutharattip
    Punnnniya Maatharum Pulampinarae
    Alukinta Paerkal Paerupettaோr
    Aenenil Aaruthal Atainthiduvar
    – Siluvaiyilae

    9. Alavatta Kalaippo Perunthuyaro
    Atiyatta Marampol Vilalaanaar
    Ulanthorum Thaalchchi Thalaiththidavae
    Uyarparan Atimai Pol Vilalaanaar
    Thayaiyuyarththiduvon Thaalvataivaan
    Thanaith Thaalththiduvon Uyarvataivaan
    – Siluvaiyilae

    10. Utaiyinai Sevakar Pitiththiluththu
    Uriththidum Vaelai Kaayamellaam
    Mataithiranthodum Vellamena
    Marupati Uthiram Sorinthathaiyo
    Anniyarum Valippokkarum Naam
    Adakkuvom Theeya Aasaikalai
    – Siluvaiyilae

    11. Kalumaram Enta Siluvaiyilae
    Kalangamillaatha Iraimakanai
    Vilumiya Nalam Pala Purinthavarai
    Veruththiruppaanniyaal Arainthu Vaiththom
    Oru Kanamaenum Yesuvaeyaam
    Umaip Piriyaamal Vaalach Seyveer
    – Siluvaiyilae

    12. Nannpanukkaaka Thannuyirai
    Nalkuvathinumaelaana Anpu
    Konndavar Yaarumae Illaiyanto?
    Koduththaar Yesu Tham Uyir Namakkaay
    Thamaiyanpu Seythaar Namakkaaka
    Thamaimuluthum Avar Kaiyaliththaar
    – Siluvaiyilae

    13. Mannnnil Kothumai Manni Vilunthu
    Matinthaal Thaanae Palan Alikkum
    Vinnnnil Vaalvu Namakkarula
    Viruppudan Yesu Uyirthuranthaar
    Viyaakula Annai Mativalarum
    Meetparae Emmaik Kaaththarulveer
    – Siluvaiyilae

    14. Ulakin Oliyaayth Thontiyavar
    Oru Kallaraiyul Adangivittar
    Vilakum Marana Irul Thiraiyum
    Vilangum Kiristhuvin Arul Oliyaal
    Kiristhuvae Enakku Uyiraakum
    Maranam Enakku Aathaayam
    – Siluvaiyilae

    Ninthaiyum Kodiya Vethanaiyum Song Lyrics Ninthaiyum Kodiya Vethanaiyum Song Lyrics Reviewed by Christking on December 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.