Thanthayin Anbu - Christking - Lyrics

    Thanthayin Anbu

    அன்று அந்தச் சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு
    காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார்.
    ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி
    பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக
    இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும்
    நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன்
    ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனது கண்களைத் தந்தை
    துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும்
    காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை
    அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு,
    தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.
    காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது
    இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது. மரங்கள் பேயாட்டம் ஆடின.
    மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத்
    துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு
    தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்
    என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.சிறிது நேரத்தில், இனி கத்திப்
    பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு
    துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும்
    ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு
    கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன்
    உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான்.
    கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்!
    ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில்
    அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.
    ‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும்
    மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே
    உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா?
    பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக்
    காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று
    கேட்டான். ‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக
    வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின்
    உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு
    தந்தையின் நோக்கம் புரிந்தது. கடவுளும் அந்தத் தந்தையைப்
    போலத்தான், நம்மோடு இருக்கிறார். துன்பத்திலும் சோகத்திலும்
    தவிக்கும்போது துவண்டுவிடாமல், நாம் தீரர்களாக வேண்டும்
    என்பதற்காகவே பல நேரங்களில் மெளனம் காத்து வெறும் பார்வையாளரைப்v போல் இருக்கிறார்.

    Picked up the boy and his father on a
    Went to the forest. Presented a challenge to the son.
    '' My son, now in front of you is a big challenge. The winner
    If you have, you will be the largest viranaki. Today the whole night alone
    This should be in the forest. Your eyes will be built. However,
    You scared; Do otivantuvitavum home '' he said. Boy
    Prepared to meet the challenge with gusto. His father's eyes
    Cloth tied tightly. Then, return to the Father
    Footsteps, gradually disappeared. Until then, the father
    That is close to him in courage,
    Jittery fox howling owl gave away crying.
    His fear of the wild animals takkivitumo
    Heart leapt beyond routine. Trees obsess inflicted.
    Turat malaiveru started. Nipping needle body
    Pierced. '' Wow! This leaves left nirkkatiyayt
    Poyvittare father! Someone came to me kapparrunkalen
    Shout repeatedly saw that. Payanillaiciritu time, no longer shout
    He realized that to no avail. Suddenly one of him
    Manly. Whatever happens, the circumstances prompting Let
    Although anxious attention. Thus night
    Passed. Kannayarntan faintly in the morning. Sun.
    Utampaic cuttapotutan, kankattait looked openly.
    Busty kacakkikkontu looked spectacular, surprise him!
    Bliss! Has come to cry. '' Father '' chanting near
    His father was sitting embraced flowing.
    '' Dad when did you arrive? '' He asked eagerly. Weariness
    The joy of the father, '' When my son and I
    I went away from you, '' he said. Iruntinkala night here?
    Then why I cringe whenever I alariyap
    Did not save? Why did not I say anything? '' That
    Asked. '' You have to grow heartily. You are not afraid of anything veteran
    In order to be kept silent. Because of fear
    Reaches its peak, will not dare '' the father said. Son
    The father understood the purpose. God the Father
    Like, is with us. Misery and unhappiness
    When dealing tuvantuvitamal, we must tirarkal
    Many times, just to keep the viewer in order to silence
    Is like.
    Tamil Christian Stories
    Thanthayin Anbu Thanthayin Anbu Reviewed by Christchoir on April 19, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.