Antho kalvariyil arumai / அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே - Christking - Lyrics

    Antho kalvariyil arumai / அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே



    அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே
    சிறுமை அடைந்தே தொங்கினார்

    மகிமை மாட்சிமை மறந்திழந்தோராய்
    கொடுமை குருசைத் தெரிந்தெடுத்தாரே
    மாயலோகத்தோ டழியாது யான்
    தூய கல்வாரியின் அன்பை அண்டிடவே

    அழகுமில்லை சௌந்தரியமில்லை
    அந்தக் கேடுற்றார் எந்தனை மீட்க
    பல நிந்தைகள் சுமந்தாலுமே
    பதினாயிரம் பேரிலும் சிறந்தவரே
    முளின் முடியும் செவ்வங்கி அணிந்தும்
    கால் கரங்கள் ஆணிகள் பாய்ந்தும்
    குருதி வடிந்தவர் தொங்கினார்
    வருந்தி மடிவோரையும் மீட்டிடவே

    அதிசயம் இது இயேசுவின் நாமம்
    அதினும் இன்பம் அன்பரின் தியானம்
    அதை எண்ணியே நிதம் வாழ்வேன்
    அவர் பாதையே நான் தொடர்ந்தேகிடவே

    சிலுவைக் காட்சியை கண்டு முன்னேறி
    சேவையே புரிவேன் ஜீவனும் வைத்தே
    என்னைச் சேர்ந்திட வருவே னென்றார்
    என்றும் உண்மையுடன் நம்பி வாழ்ந்திடுவேன்





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Good Friday Songs
    Antho kalvariyil arumai / அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே Antho kalvariyil arumai / அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரே Reviewed by Christchoir on July 04, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.