Iya neeranu anna kaybavin / ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் - Christking - Lyrics

    Iya neeranu anna kaybavin / ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்



    ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்
    நையவே பட்டபாடு ஏசையாவே
    கைகள் கட்டப்பட்டவோ கால்கள் தள்ளாடினவோ
    கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே

    திருமுகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க
    இருளர் கஸ்திகொடுக்க ஏசையாவே
    பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க
    அருமைப் பொருளதான ஏசையாவே

    முள்ளின் முடியணிந்து வள்ளலே என்றிகழ
    எள்ளளவும் பேசாத ஏசையாவே
    கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்
    கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே

    கற்றூணில் சேர்த்திறுக்கிச் செற்றலர்தாம் முறுக்கிக்
    கர்வங்கொண்டே தூஷிக்க ஏசையாவே
    சற்றுமிரக்கமில்லாச் சண்டாளன் ஓடி வந்து
    சாடிக் கன்னத்தறைய ஏசையாவே

    பொன்னான மேனியதில் புழுதி மிகப்படிய
    புண்ணியன் நீர் கலங்க ஏசையாவே
    அண்ணலே அன்பருய்ய அவஸ்தைகளைச் சகித்தீர்
    அடியேனைக் காத்தருளும் ஏசையாவே





    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Good Friday Songs
    Iya neeranu anna kaybavin / ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் Iya neeranu anna kaybavin / ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் Reviewed by Christchoir on July 04, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.