Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே - Christking - Lyrics

    Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே



    ஆவியானவரே ஆவியானவரே
    பரிசுத்த ஆவியானவரே
    அன்பின் ஆவியே
    அபிஷேகம் இன்று தாருமே

    1. பாத்திரம் நிரம்பி வழிய வேண்டுமே
    கன்மலை தடாகமாக வேண்டுமே
    கற்பாறை நீரூற்றாக வேண்டுமே
    வரப்புகள் யாவும் தணிய வேண்டுமே – ஆவியானவரே

    2. ஜனத்தின்மேல் அசைவாட வேண்டுமே
    ஜனத்தின் பாவம் உணர்த்த வேண்டுமே
    ஒழுங்கின்மை மாற வேண்டுமே
    வெறுமை நிறைவாக வேண்டுமே – ஆவியானவரே

    3. நாவிலே அக்கினி வேண்டுமே
    உள்ளத்திலே ஜீவ நதி ஓடவே
    பெருங்காற்று முழக்கம் வேண்டுமே
    இருக்குமிடம் அசைய வேண்டுமே – ஆவியானவரே

    4. அந்நிய பாஷைகளைப் பேசியே
    மண்ணிலே சாட்சியாக வாழுவேன்
    விண்ணிலே உம்மை நான் சந்திக்க
    புண்ணியரே என்னையும் நிரப்புமே – ஆவியானவரே

    5. வல்லமை வரங்கள் வேண்டுமே
    சொல்லவும் வாக்கு வேண்டுமே
    கள்ளங்கபடு மாற வேண்டுமே
    உள்ளத்திலே தேவ அன்பு ஊற்றுமே – ஆவியானவரே

    6. உள்ளத்திலே ஆறுதல் வேண்டுமே
    வாழ்விலே மாறுதல் வேண்டுமே
    ஊழியத்தில் எழுப்புதல் வேண்டுமே
    பாழிடங்கள் அரண்மனையாகவே – ஆவியானவரே






    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics In English,A
    Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே Aaviyanavare Aaviyanavare – ஆவியானவரே ஆவியானவரே Reviewed by Christchoir on August 10, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.