Balipeedathil Ennai Parane - பலிபீடத்தில் என்னைப் பரனே - Christking - Lyrics

    Balipeedathil Ennai Parane - பலிபீடத்தில் என்னைப் பரனே

    Balipeedathil Ennai Parane PPT-Download

    பலிபீடத்தில் என்னைப் பரனே
    படைக்கிறேனே இந்த வேளை
    அடியேனை திருச்சித்தம் போல
    ஆண்டு நடத்திடுமே (2)

    பல்லவி

    கல்வாரியின் அன்பினையே
    கண்டு விரைந்தோடி வந்தேன் (2)
    கழுவும் உம் திரு இரத்தத்தாலே
    கரை நீங்க இருதயத்தை (2)

    1. நீரன்றி என்னாலே பாரில்
    ஏதும் நான் செய்திட இயலேன்
    சேர்ப்பீரே வழுவாது என்னைக்
    காத்துமக்காய் நிறுத்தி (2) – கல்வாரியின்

    2. ஆவியோடாத்மா சரீரம்
    அன்பரே உமக்கென்றும் ஈந்தேன்
    ஆலய மாக்கியே இப்போ
    ஆசீர்வதித்தருளும் (2) – கல்வாரியின்

    3. சுயமென்னில் சாம்பலாய் மாற
    சுத்தாவியே அனல் மூட்டும்
    ஜெயம் பெற்று மாமிசம் சாக
    தேவா அருள் செய்குவீர் (2) – கல்வாரியின்

    4. பொன்னையும் பொருளையும் விரும்பேன்
    மண்ணின் வாழ்வையும் நான் வெறுத்தேன்
    மன்னவன் இயேசுவின் சாயல்
    இந்நிலத்தே கண்டதால் (2) – கல்வாரியின்

    Balippeedaththil ennai paranae
    Padaikkiraenae indha vaelai
    Adiyaenai thirusiththam poala
    Aandu nadaththidumae

    Kalvaariyin anbinaiyae
    Kandu viraindhoadi vandhaen
    Kazhuvum um thiruraththathaalae
    Karai neenga iridhayaththai

    1. Neerandri ennaalae paaril
    Aedhum naan seidhida iyalaen
    Saerpeerae vazhuvaadhu ennai
    Kaaththumakkaai niruththi – Kalvaariyin

    2. Aaviyoadaathmaa sareeram
    Anbarae umakkendrum eendhaen
    Aalayamaakiyae ippoa
    Aasirvadhiththarulum – Kalvaariyin

    3. Suyamennil saambalaai maara
    Suththaaviyae anal moottum
    Jeyam petru maamisam saaga
    Dhaeva arul seiguveer – Kalvaariyin

    4. Ponnaiyum porulaiyum virumbaen
    Mannin vaazhvaiyum naan veruthaen
    Mannavan Yaesuvin saayal
    Innilaththae kandadhaal – Kalvaariyin

    Balipeedathil Ennai Parane - பலிபீடத்தில் என்னைப் பரனே Balipeedathil Ennai Parane - பலிபீடத்தில் என்னைப் பரனே Reviewed by Christking on December 21, 2017 Rating: 5
    Powered by Blogger.