Suya Athikara Sundara Kumara - Lyrics - Christking - Lyrics

    Suya Athikara Sundara Kumara - Lyrics


    பல்லவி

    சுய அதிகாரா சுந்தரக் குமாரா
    சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான --- சுய

    சரணங்கள்

    1. அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே
    அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே
    துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே
    ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த --- சுய

    2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ
    கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ
    திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்
    சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் --- சுய

    3. நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க
    இராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
    மர முயிர் தாது இன்னும் வான் புவி யனைத்தையும் ஓர்
    வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த --- சுய

    4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே
    பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே
    சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும்
    தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சமனுக் கேட்டருள்வாய் --- சுய

    Suya Athikara Sundara Kumara - Lyrics Suya Athikara Sundara Kumara - Lyrics Reviewed by Christking on January 05, 2018 Rating: 5
    Powered by Blogger.