Deva Enaimarakkade - Lyrics - Christking - Lyrics

Deva Enaimarakkade - Lyrics


Album : | Artist :

தேவா எனைமறக்காதே - இந்தச்
சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே

நேயா உனையன்றி நீசனுக்கார் கதி
தூயா கிருபைகூர் நான் மகாதோஷி

வானுலகோர்தொழும் நாதர் -இந்த
மானிடர்கரையேற வந்தசகாயா
காலைமாலைகள் தோறும் கரைந்து உருகுகின்ற
கர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா

பாவியின் மேலிரங்கையா - பொல்லாப்
பாதகனைக்கைவிடாதே நலமெய்யா
தாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத்
தாங்கியா தரித்துந்தன் தயைபுரி ஐயா

என்மீறுதல் நினையாதே எந்தன்
இளமையின் பாவத்தை மனதில்வையாதே
உன்பாதஞ் சேர்ந்தன் உவந் தேனுனையடைந்தேன்
நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன்

நெருக்கப்படுகிறேன் தேவா - என்னை
உருக்கமாய்ப் பாராய் கிறிஸ்தேசுநாதா
இரக்கம் வைத்தென்றனின் குறைதன்னை நீக்கு
என்னை ஆட்கொண்டவா இயேசு சர்வேசா

சரணம் சரணம் சருவேசா - இந்தத்
தருணம் தருணம் உன்றன் கருணை கூர் நேசா
மரணவேளையிலும் நடுத்தீர்வை தினத்திலும்
மாபாதகன் எனை ரட்சியாய் நாதா

Deva Enaimarakkade - Lyrics Deva Enaimarakkade - Lyrics Reviewed by Christking on March 02, 2018 Rating: 5
Powered by Blogger.