Deva Ivveetil Indre - Christking - Lyrics

Deva Ivveetil Indre


Album : | Artist :

தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே - தயை
செய்வாய் எமது கோவா

மூவர் ஒருவரான தேவா கிறிஸ்துநாதா -எங்கள்
முன்னவா சத்ய வேதா
பூவில் எமக்குதவி யாருமில்லை எம் தாதா - யேசு
புண்ணியனே மா நீதா -இங்கு
நண்ணுவாய் மெய்ப் போதா - தயை
பண்ணுவாய் வினோதா
மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது
ஜீவனே யேசு கோனே - ஏழைப்
பாவிகள் மீட்பன் தானே

விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக - அதி
மேன்மையுடன் சிநேகம்
அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக - என்றும்
அத்தனோ டுற வாக - ஜெப
துந்துமிகள் முழங்க - ஐக்யம்
பந்தமுடன் இலங்க,
தந்தைப் பரனே இன்று உன்றன் அருள் நிறைவாய்ச்
சொந்தமுடன் ஈவாயே - இவர்
சந்ததம் வாழ நீயே

இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே -பரன்
இஷ்டப்படி நடந்தே
அங்கம் மனது யாவும் பங்கம் இன்றித் தொடர்ந்தே -இவர்
அனுதினமும் மகிழ்ந்தே -உயர்
அம்பர வீட்டில் சேர்ந்து -மிகு
கெம்பீரமாக வாழ்ந்து
புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில்
இங்கிதமாய்க் கொண்டாட -நிதம்
மங்களக் கவி பாட

Deva Ivveetil Indre Deva Ivveetil Indre Reviewed by Christking on March 02, 2018 Rating: 5
Powered by Blogger.