Enakku Neram Kidaikum - எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் - Christking - Lyrics

Enakku Neram Kidaikum - எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்

எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்
என் இயேசுவோடு நான் பேசுவேன்
நான் பேசுவேன் அவர் பேசுவார்
இருவரும் சந்தோஷிப்போமே

ஆபத்து நேரத்தில் கூப்பிடுவேன்
அருகில் வந்தெனக்கு உதவி செய்வார்
இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவேன்
இனிமையாய் வந்தெனக்கு பதில் கொடுப்பார்

அல்லேலூயா... அல்லேலூயா...

ஆராதனை நேரங்களில் கூப்பிடுவேன்
ஆவியின் அபிஷேகம் தந்திடுவார்
அந்நிய பாஷையில் நிரப்பிடுவார்
அபிஷேக தைலத்தை ஊற்றிடுவார்

அந்தி சந்தி மதியங்கள் கூப்பிடுவேன்
முந்தி வந்து எனக்கவர் உதவி செய்வார்
சபையிலே சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
சத்தியத்தை உணவாக்கி மகிழ்ந்திடுவேன்

உற்சாகமாய் கர்த்தருக்கு கொடுத்திடுவேன்
இரட்டிப்பான நன்மைகளைப் பெற்றிடுவேன்
ஜீவனின் அதிபதியானவரை - என்
ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவேன்
Enakku Neram Kidaikum - எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் Enakku Neram Kidaikum - எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.