Naalellaam Ninaikindren - நாளெல்லாம் நினைக்கிறேன் - Christking - Lyrics

    Naalellaam Ninaikindren - நாளெல்லாம் நினைக்கிறேன்

    நாளெல்லாம் நினைக்கிறேன்
    நீர் செய்த நன்மைகளை
    இம்மட்டும் நடத்தினீரே
    உம் அன்பிற்கு அளவில்லையே

    பாடுவேன் கிருபையை
    போற்றுவேன் மகிமையை
    உயிரானீர் இயேசுவே என்
    உலகமெல்லாம் நீங்க மட்டும் தான்

    பெலனற்று கீழே விழுந்தாலும்
    பெலவான் நீர் பெரியவரே
    பெலத்தாலே இடைகட்டினீர்
    பெலவானாய் மாற்றிவிட்டீர்

    மறுதலித்தேன் உம்மையே
    மறந்தேன் உம் அன்பினையே
    மறுபடியும் சேர்த்துக் கொண்டீர்
    மகனாக மாற்றிவிட்டீர்

    உயிரற்று உலர்ந்த என்னையும்
    உதவாதவன் என்று அறிந்தும்
    உயிர்தந்து தூக்கினீர்
    உமதாக மாற்றிவிட்டீர்
    Naalellaam Ninaikindren - நாளெல்லாம் நினைக்கிறேன் Naalellaam Ninaikindren - நாளெல்லாம் நினைக்கிறேன் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.