Nanmaigal Seythavarkku - நன்மைகள் செய்தவர்க்கு - Christking - Lyrics

Nanmaigal Seythavarkku - நன்மைகள் செய்தவர்க்கு

நன்மைகள் செய்தவர்க்கு
நன்றியுள்ள ஆராதனை
நாள்தோறும் செலுத்துகிறேன்
நாளெல்லாம் செலுத்துகிறேன்

நன்றியப்பா இயேசப்பா

இமைப்பொழுதும் என்னை நீர்
கைவிடவில்லை- நிமிடம்
தோறும் விசாரித்து நடத்துகிறீர்- என்
நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது
வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்

உலகம் என்னைத் தூற்றும்போது
தேற்றினீரைய்யா- உறவெல்லாம்
வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
நண்பன் என்னைப் பகைத்தப்போது
நண்பனானீரே- உண்மையில்லா
என்னையும் நீர் தேடி வந்தீரே

பாவசேற்றில் இருந்த என்னை
தூக்கியெடுத்தீரே- நாற்றமெல்லாம்
கழுவி என்னை மார்பில் அணைத்தீரே
அனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரே
அப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே
Nanmaigal Seythavarkku - நன்மைகள் செய்தவர்க்கு Nanmaigal Seythavarkku - நன்மைகள் செய்தவர்க்கு Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.