Neer Indri Vazhvethu - நீரின்றி வாழ்வேது இறைவா - Christking - Lyrics

Neer Indri Vazhvethu - நீரின்றி வாழ்வேது இறைவா

நீரின்றி வாழ்வேது இறைவா
உம் நினைவின்றி மகிழ்வேது தேவா
உலகத்தில் நூறு ஆண்டு நான் வாழ்ந்தபோதும்
உம் இல்லத்தில் வாழும் ஒரு நாளே போதும்

பலகோடி வார்த்தைகள் நான் கேட்ட போதும்
இயேசுவே நீர் பேசும் ஒரு வார்த்தை போதும்
ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
உம் வார்த்தையில் உண்டு அற்புதமே

கல்லுக்குள் தேரையை வைத்தவர் நீர்
அதற்குள்ளம் ஜீவனைத் தந்தவர் நீர்
உம்மையான்றி அணுவேதும் அசையாதய்யா
உம் துணையின்றி உயிர்வாழ் முடியாதய்யா

எத்தனை நன்மைகள் செய்தீர் ஐயா
அதில் எதற்கென்று
நன்றி சொல்லித் துதிப்பேன் ஐயா
அத்தனையும் சொல்ல வேண்டும் என்றால்
ஆயிரம் ஆண்டுகள் போதாதைய்யா
Neer Indri Vazhvethu - நீரின்றி வாழ்வேது இறைவா Neer Indri Vazhvethu - நீரின்றி வாழ்வேது இறைவா Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.