Padal Padi Magilvene - பாடல் பாடி மகிழ்வேனே - Christking - Lyrics

Padal Padi Magilvene - பாடல் பாடி மகிழ்வேனே

பாடல் பாடி மகிழ்வேனே துதி அல்லேலூயா
பாவி என்னை மீட்டாரே துதி அல்லேலூயா
பாரில் வந்தாரே தந்தாரே
அன்பால் மீட்டாரே - பரிசுத்தரை
நித்தியரை பாடிப் போற்றுவேன்

அல்லேலூயா பாடுவேன் நான்

மகிமையின் ராஜா அவர்
மகத்துவம் நிறைந்தவர்
மனமெல்லாம் நிறையுதே
மகிழ்ச்சியில் சிலிர்க்குதே

கனிவான மீட்பரவர்
கண்மணி போல் காப்பாரவர்
கீதங்களால் ஆராதிப்பேன்
ஐக்கியத்தில் ஆனந்திப்பேன்

நீதியுள்ள நீதிபரர்
மேகமீதில் வந்திடுவார்
நித்தியானந்த வாழ்வினையே
எனக்காக தந்திடுவார்
Padal Padi Magilvene - பாடல் பாடி மகிழ்வேனே Padal Padi Magilvene - பாடல் பாடி மகிழ்வேனே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

1 comment:

Powered by Blogger.