Parisutha Aaviyae Pathargal - பரிசுத்த ஆவியே - Christking - Lyrics

Parisutha Aaviyae Pathargal - பரிசுத்த ஆவியே

பரிசுத்த ஆவியே
பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே
குறைகள் தீர்ப்பவரே

தேற்றிடும் தெய்வமே
திடன் தருபவரே
ஊற்றுத் தண்ணீரே
உள்ளத்தின் ஆறுதலே-எங்கள்

பயங்கள் நீக்கிவிட்டீர்
பாவங்கள் போக்கிவிட்டீர்
ஜெயமே உம் வரவால்
ஜெபமே உம் தயவால் - தினம்

அபிஷேக நாதரே
அச்சாரமானவரே
மீட்பின் நாளுக்கென்று
முத்திரையானவரே-எங்கள்

விடுதலை தருபவரே
விண்ணப்பம் செய்பவரே
சாட்சியாய் நிறுத்துகிறீர்
சத்தியம் போதிக்கிறீர்-தினம்

அயல்மொழி பேசுகிறோம்
அதிசயம் காண்கிறோம்
வரங்கள் பெறுகிறோம்
வளமாய் வாழ்கிறோம்

சத்துரு வரும் போது
எதிராய் கொடி பிடிப்பீர்
எக்காளம் ஊதுகிறோம்
எதிரியை வென்று விட்டோம்
Parisutha Aaviyae Pathargal - பரிசுத்த ஆவியே Parisutha Aaviyae Pathargal - பரிசுத்த ஆவியே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.