Parisutha Aaviyae Pathargal - பரிசுத்த ஆவியே - Christking - Lyrics

    Parisutha Aaviyae Pathargal - பரிசுத்த ஆவியே

    பரிசுத்த ஆவியே
    பக்தர்கள் துணையாளரே
    கூட இருப்பவரே
    குறைகள் தீர்ப்பவரே

    தேற்றிடும் தெய்வமே
    திடன் தருபவரே
    ஊற்றுத் தண்ணீரே
    உள்ளத்தின் ஆறுதலே-எங்கள்

    பயங்கள் நீக்கிவிட்டீர்
    பாவங்கள் போக்கிவிட்டீர்
    ஜெயமே உம் வரவால்
    ஜெபமே உம் தயவால் - தினம்

    அபிஷேக நாதரே
    அச்சாரமானவரே
    மீட்பின் நாளுக்கென்று
    முத்திரையானவரே-எங்கள்

    விடுதலை தருபவரே
    விண்ணப்பம் செய்பவரே
    சாட்சியாய் நிறுத்துகிறீர்
    சத்தியம் போதிக்கிறீர்-தினம்

    அயல்மொழி பேசுகிறோம்
    அதிசயம் காண்கிறோம்
    வரங்கள் பெறுகிறோம்
    வளமாய் வாழ்கிறோம்

    சத்துரு வரும் போது
    எதிராய் கொடி பிடிப்பீர்
    எக்காளம் ஊதுகிறோம்
    எதிரியை வென்று விட்டோம்
    Parisutha Aaviyae Pathargal - பரிசுத்த ஆவியே Parisutha Aaviyae Pathargal - பரிசுத்த ஆவியே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.