Saranam Nambinaen Yesu - சரணம் நம்பினேன் யேசு - Christking - Lyrics

Saranam Nambinaen Yesu - சரணம் நம்பினேன் யேசு

சரணம் நம்பினேன் யேசு நாதா இது

தருணம் தருணம் உன்றன் கருணை கூர் வேதா

நின் அருளால் இங்கே வந்து-என்றும்
நின் அடைக்கலமாக என்னையே தந்து
முன்னாள் வினையைத் துறந்து ஆதி
மூலமே உனக் கோலம் ரட்சியும் என்று

சன்னதி முன் தொண்டன் நின்றே -என்றும்
தாயான கருணை உனக்கு உண்டென்றே
சென்னிமேல் கரம் தூக்கி நின்றே உனைச்
சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே

அலைவாய்த் துரும்புபோல் ஆடி -உன
ததி கருணை வரச் செம்பாதந் தேடித்
தொலையாத வாழ்வை மன்றாடி அன்பின்
தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி

இனிய கருணை பொழிவேதா-எனை
இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா
கனி வினை நீக்கிய நீதா-நசரைக்
கர்த்தாதி கர்த்தா உன் கருணையைத் தா தா
Saranam Nambinaen Yesu - சரணம் நம்பினேன் யேசு Saranam Nambinaen Yesu - சரணம் நம்பினேன் யேசு Reviewed by Christking on May 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.