Singara Maligaiyil Jeya - சிங்கார மாளிகையில் - Christking - Lyrics

Singara Maligaiyil Jeya - சிங்கார மாளிகையில்

சிங்கார மாளிகையில்
ஜெய கீதங்கள் பாடிடுவோம்
சீயோன் மணவாளனுடன்

ஆனந்தம் பாடி அன்பரைச் சேர்ந்து
ஆறுதலடைந்திடுவோம் அங்கே
அலங்கார மகிமையின் கிரீடங்கள் சூடி
அன்பரில் மகிழ்ந்திடுவோம்

துயரப்பட்டவர் துதித்துப்பாடுவார்
துதியின் உடையுடனே அங்கே
உயரமாம் சீயோன் உன்னதரோடு
களித்து கவி பாடுவோம்

முள்முடி நமக்காய் அணிந்த மெய் இயேசுவின்
திருமுகம் கண்டிடுவோம் அங்கே
முத்திரையிட்ட சுத்தர்கள் வெள்ளங்கி
தரித்தோராய் துதித்திடுவார்

பூமியின் அரசைப் புதுப்பாட்டாய் பாடி
புன்னகை பூத்திடுவோம் புது
எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்பட்டோராய்
மண்ணாசை ஒழித்திடுவோம்

அவருரைத்த அடையாளங்களெல்லாம்
தவறாமல் நடக்கின்றதே அவர்
வரும் வேளை அறியாதிருப்பதால்
எப்போதும் ஆயத்தமாயிருப்போம்
Singara Maligaiyil Jeya - சிங்கார மாளிகையில் Singara Maligaiyil Jeya - சிங்கார மாளிகையில் Reviewed by Christking on May 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.