Thagamullavan Mel - தாகமுள்ளவன் மேல் - Christking - Lyrics

Thagamullavan Mel - தாகமுள்ளவன் மேல்

தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுவேன் என்றீர்
வறண்ட நிலத்தில் ஆறுகளை ஊற்றுவேன் என்றீர்

ஊற்றும் ஐயா உம் வல்லமையை
தாகத்தோடு காத்திருக்கிறேன் -நான்

மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே
மக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே

முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே
கனவுகள் காட்சிகள், காண வேண்டுமே -2

நீரோடை அருகிலுள்ள மரங்களைப் போல
நித்தமும் தவறாமல் கனிதர வேண்டும் -2

கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்
சதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும் -2

வனாந்தரம் செழிப்பான தோட்டமாகணும்
வயல்வெளி அடர்ந்த காடாகணும் -2

நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே
நல்வாழ்வு நம்பிக்கையும் வளர வேண்டுமே -2

தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்
எல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும் -2
Thagamullavan Mel - தாகமுள்ளவன் மேல் Thagamullavan Mel - தாகமுள்ளவன் மேல் Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.