Then Inimaiyilum Yesuvin Naamam - தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் - Christking - Lyrics

Then Inimaiyilum Yesuvin Naamam - தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுர மாமே - அதைத்
தேடியே நாடி ஒடியே வருவாய்
தினமும் நீ மனமே

காசினிதனிலே நேசமதாக
கஷ்டத்தை உத்தரித்தே - பாவ கசடதை
அறுத்து சாபத்தைத் தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே

பாவியை மீட்கத் தாவியே உயிரை
தாமே ஈந்தவராம் - பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே

காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்'
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே

துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் - நீயும்
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துணைக்
காப்பார் ஆசைகொள் நீ மனமே

பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்றும் நாமம் - அதைப்
பூண்டுகொண்டால் தான் பொன்னகர்
வாழ்வில் புகுவாய் நீ மனமே
Then Inimaiyilum Yesuvin Naamam - தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் Then Inimaiyilum Yesuvin Naamam - தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.