Ennai yaarendru enakke indru - என்னை யாரென்று எனக்கே இன்று - Christking - Lyrics

    Ennai yaarendru enakke indru - என்னை யாரென்று எனக்கே இன்று

    என்னை யாரென்று [E min T100 4/4]
    என்னை யாரென்று எனக்கே இன்று
    அடையாளம் காட்டினீர்
    வெறும் மண் என்று உதிரும் புல்லென்று
    எனக்கே நினைவூட்டினீர்

    Ennai yaarendru enakke indru
    Adaiyaalam kaatineer
    Verum mann yendru udhirum pullendru
    Enakke ninaivoottineer

    என்னால் முடியும் என்று நினைத்தேன் - எனக்கு
    எல்லாம் தெரியும் என்று நடந்தேன் - ஆனால்
    வழியிலே தவறி விழுந்தேன் - நல்ல
    வழியையும் தவறி அலைந்தேன் - நான்
    தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன்

    Ennaal mudiyum endru ninaithen - enakku
    Ellaam theriyum endru nadandhen - aanaal
    Vazhiyile thavari vizhundhen - nalla
    Vazhiyaiyum thavari alaindhen - naan
    Tholaindhen enbadhai unarndhen

    நானாய் நடந்த சில வழிகள் - இன்று
    வீணாய் மனதிற்குள்ளே வலிகள் - எந்தன்
    சுயத்தினால் கிடைத்த சிறைகள் - எந்தன்
    அகத்தினுள் படிந்த கறைகள் - இல்லை
    நிறைகள் முற்றிலும் குறைகள்

    Naanaai nadandha sila vazhigal - indru
    Veenaai manadhirkulle valigal - endhan
    Suyathinaal kidaitha siraigal - endhan
    Agathinul padindha karaigal - Yedhu
    Niraigal mutrilum kuraigal

    வேண்டாம் இனி எனது விருப்பம் - ஐயா
    உந்தன் வழியில் என்னை நடத்தும் - இன்றே
    எந்தன் சுயமதனை அகற்றும் - அன்று
    எந்தன் ஜீவியமது சிறக்கும் - புத்தி
    பொருத்தும் முற்றிலும் திருத்தும்

    Vendaam ini enadhu viruppam - aiyaa
    Undhan vazhiyil ennai nadathum - indre
    Endhan suyamadhanai agatrum - andru
    Endhan jeeviyamadhu sirakkum - buthi
    Poruthum mutrilum thiruthum
    Ennai yaarendru enakke indru - என்னை யாரென்று எனக்கே இன்று Ennai yaarendru enakke indru - என்னை யாரென்று எனக்கே இன்று Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.