Yesuvin Anbai Thiyaanikkaiyil - இயேசுவின் அன்பை தியானிக்கையில் - Christking - Lyrics

Yesuvin Anbai Thiyaanikkaiyil - இயேசுவின் அன்பை தியானிக்கையில்

இயேசுவின் அன்பை தியானிக்கையில்
கண்களில் கண்ணீர் புரண்டோடுதே
கள்ளமில்லா அந்தக் கல்வாரி அன்பு
கள்ளன் என் இதயத்தைக் கரைத்திட்டதே
கல்லான என் உள்ளம் கரைந்திட்டதே

பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றுமே புரியவில்லை
எனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய்
எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்

மெய்யான அன்பை நான் தேடி அலைந்தேன்
எங்குமே காணவில்லை
பாவியாய் ஓடி நான் திரிந்திட்ட வேளை
என்னையும் தம்மிடம் சேர்த்துக் கொண்டார்

ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடி
இயேசு என் வாழ்வில் வந்தார்
என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய்
உண்மையாய் ஊழியம் செய்திடுவேன்
Yesuvin Anbai Thiyaanikkaiyil - இயேசுவின் அன்பை தியானிக்கையில் Yesuvin Anbai Thiyaanikkaiyil - இயேசுவின் அன்பை தியானிக்கையில் Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.