Yethenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம் - Christking - Lyrics

Yethenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம்

ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே

இப்போதும் பக்தியுள்ளோர்
விவாகம் தூய்மையாம்-மூவர்
பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம்

ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே-இம்மாப்பிள்ளைக்கு
பெண்ணை கொடுக்க வாருமே

இரு தன்மையும் சேர்ந்தே
கன்னியின் மைந்தனே-இவர்கள்
இரு கையும் இணைக்க வாருமே

மெய் மணவாளனான
தேவ குமாரர்க்கே-சபையாம்
மனையாளை ஜோடிக்கும் ஆவியே

நீரும் இந்நாளில் வந்து
இவ்விரு பேரையும்-இணைத்து
அன்பாய் வாழ்த்தி மெய் பாக்யம் ஈந்திடும்

கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்-எத்தீங்கில்
நின்றும் காத்து பேர் வாழ்வு ஈந்திடும்
Yethenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம் Yethenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம் Reviewed by Christking on June 03, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.