Yethenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம் - Christking - Lyrics

    Yethenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம்

    ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே
    பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே

    இப்போதும் பக்தியுள்ளோர்
    விவாகம் தூய்மையாம்-மூவர்
    பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம்

    ஆதாமுக்கு ஏவாளை
    கொடுத்த பிதாவே-இம்மாப்பிள்ளைக்கு
    பெண்ணை கொடுக்க வாருமே

    இரு தன்மையும் சேர்ந்தே
    கன்னியின் மைந்தனே-இவர்கள்
    இரு கையும் இணைக்க வாருமே

    மெய் மணவாளனான
    தேவ குமாரர்க்கே-சபையாம்
    மனையாளை ஜோடிக்கும் ஆவியே

    நீரும் இந்நாளில் வந்து
    இவ்விரு பேரையும்-இணைத்து
    அன்பாய் வாழ்த்தி மெய் பாக்யம் ஈந்திடும்

    கிறிஸ்துவின் பாரியோடே
    எழும்பும் வரைக்கும்-எத்தீங்கில்
    நின்றும் காத்து பேர் வாழ்வு ஈந்திடும்
    Yethenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம் Yethenil Aathi Manam - ஏதேனில் ஆதி மணம் Reviewed by Christking on June 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.