Immatum Jeevan Thantha Karthavai - Christking - Lyrics

    Immatum Jeevan Thantha Karthavai


    இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
    எண்ணமாய்த் தோத்தரிப்போமாக

    அனுபல்லவி

    நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து
    நற்சுகம் மேவவும் அற்புதமாகவும். — இம்மட்டும்

    சரணங்கள்

    1. காலம்சொல் போல் கழியும், தண்ணீரைப்போல் வடியும்,
    கனாவைப் போலேயும் ஒழியும்;
    வாலிபமும் மறையும், சீலம் எல்லாம் குறையும்,
    மண்னின் வாழ் வொன்றும் நிற்க மாட்டாது;
    கோலப் பதுமைக்கும், நீர்க குமிழிக்கும், புகைக்குமே
    கொண்ட உலகத்தில் அண்டபரன் எமைக்
    கண்டு கருணைகள் விண்டு தயவுடன்.
    - இம்மட்டும்

    2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம் ;
    பரம பாதையைத் தொடர்ந்தோம் ;
    வலிய தீமையை வென்றோம் , நலியும் ஆசையைக் கொன்றோம் ,
    வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம் ;
    கலிஎன்ற தெல்லாம் விண்டோம் , கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்;
    காய்ந்த மனதொடு பாய்ந்துவிழு கணம்
    சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன்
    — இம்மட்டும்

    3. சனசேதம் வருவிக்கும் , கேடுகட்கோர் முடிவு
    தந்து , நொறுங்கினதைக் கட்டிக்
    கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
    கண்ணோக்கி எல்லார்மேல் அன்றன்று
    தினமும் அருள் உதிக்கச் செய்து , தமது தேவ
    சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
    மைந்தனால் எங்களை இந்த வினோதமாய்
    — இம்மட்டும்


    Immattum Jeevan Thantha Karththaavai Aththiyantha
    Ennnamaayth Thoththarippomaaka

    Anupallavi

    Nammai Ratchikka Vanthu Thammai Paliyaayth Thanthu
    Narsukam Maevavum Arputhamaakavum. — Immattum

    Saranangal

    1. Kaalamsol Pol Kaliyum, Thannnneeraippol Vatiyum,
    Kanaavaip Polaeyum Oliyum;
    Vaalipamum Maraiyum, Seelam Ellaam Kuraiyum,
    Mannnin Vaal Vontum Nirka Maattathu;
    Kolap Pathumaikkum, Neerka Kumilikkum, Pukaikkumae
    Konnda Ulakaththil Anndaparan Emaik
    Kanndu Karunnaikal Vinndu Thayavudan.
    - Immattum

    2. Palavitha Ikkattayum Thikilkalaiyum Kadanthom ;
    Parama Paathaiyaith Thodarnthom ;
    Valiya Theemaiyai Ventom , Naliyum Aasaiyaik Kontom ,
    Vanjar Pakaikkum Thappi Nintom ;
    Kalienta Thellaam Vinntoom , Karththaavin Meetpaik Kanntoom;
    Kaayntha Manathodu Paaynthuvilu Kanam
    Saaynthu Kedavum Aaraaynthu Neriyudan
    — Immattum

    3. Sanasetham Varuvikkum , Kaedukatkor Mutivu
    Thanthu , Norunginathaik Kattik
    Kana Sapaiyai Aatharith Thanpaay Aaseervathiththuk
    Kannnnokki Ellaarmael Antantu
    Thinamum Arul Uthikkach Seythu , Thamathu Thaeva
    Sinthai Yinodathi Vinthaiyathaay Uyir
    Mainthanaal Engalai Intha Vinothamaay
    — Immattum

    Immatum Jeevan Thantha Karthavai Immatum Jeevan Thantha Karthavai Reviewed by Christking on August 25, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.