Iyayya Naan Paavi Ennai Aalum - Christking - Lyrics

    Iyayya Naan Paavi Ennai Aalum


    ஐயையா, நான் பாவி – என்னை
    ஆளும் தயாபரனே!

    சரணங்கள்

    1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம்
    போனவழி நடந்தேன் – ஏ
    சையா, அபயம்! அபயம்! இரங்கும், பேர்

    ஐயா, என் தாதாவே — ஐயையா

    2. எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள்,
    எத்தனை தீதுகளோ? – எனது
    அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத்

    தாண்டருளும், கோவே — ஐயையா

    3. வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய்
    மாலமோ, ரண்டகமோ? – மனச்
    சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும்,
    சமஸ்த நன்மைக் கடலே — ஐயையா

    4. பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும்,
    பொறாமையும், ஆணவமும், விட்
    டுய்யும்படி அருள் செய்யும், அனாதி ஓர்

    ஏகதிரித்துவனே — ஐயையா

    5. உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித்
    துன தடியார்களையும் – நான்
    என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க

    ஏவும், பராபரனே — ஐயையா


    Aiyaiyaa, Naan Paavi – Ennai
    Aalum Thayaaparanae!

    Saranangal

    1. Poyyaam Ulaka Ullaasaaththinaal Manam
    Ponavali Nadanthaen - Ae
    Saiyaa, Apayam! Apayam! Irangum, Paer
    Aiyaa, en Thaathaavae — Aiyaiyaa

    2. Eththanai Soothukal, Eththanai Vaathukal,
    Eththanai Theethukalo? – Enathu
    Aththanae! En Pilai Aththanaiyum Poruth
    Thaanndarulum, Kovae — Aiyaiyaa

    3. Vanjakamo, Karavo, Kapatoo, Maay
    Maalamae, Ranndakamo? - Manach
    Sanjalam Neekki Enakkarul Seyyum,
    Samastha Nanmaik Kadalae — Aiyaiyaa

    4. Poyyum, Purattum, Uruttum, Thiruttum,
    Poraamaiyum, Aanavamum, Vit
    Duyyumpati Arul Seyyum, Anaathi or
    Aekathiriththuvanae — Aiyaiyaa

    5. Unnai Yaavattilum Paarkkach Sinaekith
    Thuna Thatiyaarkalaiyum - Naan
    Ennaich Sinaekikkiraarpol Sinaekikka
    Aevum, Paraaparanae — Aiyaiyaa

    Iyayya Naan Paavi Ennai Aalum Iyayya Naan Paavi Ennai Aalum Reviewed by Christking on September 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.