Kalvariye Kalvariye Kal Manam - Christking - Lyrics

    Kalvariye Kalvariye Kal Manam


    கல்வாரியே கல்வாரியே
    கல் மனம் உருக்கிடும் கல்வாரியே – என்

    1. பாவி துரோகி சண்டாளன் நானாயினும்
    பாதகம் போக்கிப் பரிவுடன் இரட்சித்த
    – கல்வாரியே

    2. பாவியை மீட்கவே நாயகன் இயேசு தம்
    ஜீவனின் இரத்தத்தைச் சிந்தின உன்னத
    – கல்வாரியே

    3. நாதன் எனக்காக ஆதரவற்றோராய்ப்
    பாதகர் மத்தியில் பாதகன் போல் தொங்கும்
    – கல்வாரியே

    4. முள்முடி சூடியே கூர் ஆணி மீதிலே
    கள்ளனை போல என் நாயகன் தொங்கிடும்
    – கல்வாரியே

    5. சர்வம் படைத்தாளும் சொர்லோக நாயகன்
    கர்மத்தின் கோலமாய் நிற்பதைக் காண்பேனோ
    – கல்வாரியே

    6. எண்ணும் நன்மை ஏதும் என்னிலே இல்லையே
    பின்னை ஏன் நேசித்தீர் என்னை என் பொன் நாதா
    – கல்வாரியே

    7. இவ்வித அன்பை நான் எங்குமே காணேனே
    எவ்விதம் இதற்கீடு ஏழை நான் செய்குவேன்
    – கல்வாரியே


    Kalvaariyae Kalvaariyae
    Kal Manam Urukkidum Kalvaariyae - en

    1. Paavi Thuroki Sanndaalan Naanaayinum
    Paathakam Pokkip Parivudan Iratchiththa
    - Kalvaariyae

    2. Paaviyai Meetkavae Naayakan Yesu Tham
    Jeevanin Iraththaththaich Sinthina Unnatha
    - Kalvaariyae

    3. Naathan Enakkaaka Aatharavattaraayp
    Paathakar Maththiyil Paathakan Pol Thongum
    - Kalvaariyae

    4. Mulmuti Sootiyae Koor Aanni Meethilae
    Kallanai Pola en Naayakan Thongidum
    - Kalvaariyae

    5. Sarvam Pataiththaalum Sorloka Naayakan
    Karmaththin Kolamaay Nirpathaik Kaannpaeno
    - Kalvaariyae

    6. Ennnum Nanmai Aethum Ennilae Illaiyae
    Pinnai Aen Naesiththeer Ennai en Pon Naathaa
    - Kalvaariyae

    7. Ivvitha Anpai Naan Engumae Kaanneenae
    Evvitham Ithargeedu Aelai Naan Seykuvaen
    - Kalvaariyae

    Kalvariye Kalvariye Kal Manam Kalvariye Kalvariye Kal Manam Reviewed by Christking on September 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.