Kignsithamum Nenjaee - கிஞ்சிதமும் நெஞ்சே - Christking - Lyrics

    Kignsithamum Nenjaee - கிஞ்சிதமும் நெஞ்சே


    கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல
    கேடகத்தைப் பிடி நீ – விசுவாசக்
    கேடகத்தைப் பிடி நீ.

    வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
    வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,
    நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
    நிச்சயமான பரிசை அறிந்து நீ.
    – கிஞ்சிதமும்

    1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,
    பத்தியில் தெளிக்கவும், – நித்ய
    ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
    திறமை அளிக்கவும்,
    சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்
    ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,
    தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
    செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம்.
    – கிஞ்சிதமும்

    2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,
    கண்டடைந்தார் பேறு? – நல்ல
    தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
    தொகுத்து வெ வ்வேறு
    விண்டுரைக்கில் பெருகும்@ தீ அணைத்ததும்,
    வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
    கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல
    காரியங்களையும் பார் இது மா ஜெயம்.
    – கிஞ்சிதமும

    3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
    உன் செயல் மா பேதம் – அதின்
    தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,
    துணை அவர் பாதம்
    ஏற்றர வணைக்கவே பணிவாக
    இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,
    ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
    ஆவி உதவியை மேவி, அடைந்து, நீ.
    – கிஞ்சிதமும்


    Kinjithamum Nenjae, Anjidaathae – Nalla
    Kaedakaththaip Piti Nee – Visuvaasak
    Kaedakaththaip Piti Nee.

    Vanjanaiyaakavae Paey Ethirththuntanai
    Vannik Kannaithoduth Theykinta Vaelaiyil,
    Nenjil Padaamal Thadukka Athu Nalla
    Nichchayamaana Parisai Arinthu Nee.
    - Kinjithamum

    1. Paavaththai Verukka, Aapaththaich Sakikka,
    Paththiyil Thelikkavum, – Nithya
    Jeevanaip Pitikka, Lokaththai Jeyikka,
    Thiramai Alikkavum,
    Saavae Un Koor Engae? Paathaalamae, Un
    Jeyam Engae? Entu Nee Koovik Kalikkavum,
    Thaevan Ukanthunaith Thaan Angakarikka,
    Seyyavumae Athu Thivya Nal Aayutham.
    - Kinjithamum

    2. Panntaiyar Anthap Parisaiyinaal Allo,
    Kanndatainthaar Paeru? – Nalla
    Thonndan Aapael Muthalaana Vaitheekaraith
    Thokuththu Ve Vvaeru
    Vinnduraikkil Perukum@ Thee Annaiththathum,
    Veeriya Singaththin Vaayai Ataiththathum,
    Kanntithamaay Vetti Konndathu Maampala
    Kaariyangalaiyum Paar Ithu Maa Jeyam.
    - Kinjithamuma

    3. Oottamudan Ipparisaip Pitiththida
    Un Seyal Maa Paetham – Athin
    Thottamum Mutivum Aesuparan Seyal,
    Thunnai Avar Paatham
    Aettara Vannaikkavae Pannivaaka
    Iranthu Mantati Avar Moolamaakavae,
    Aattal Sey Thaettaravaali Parisuththa
    Aavi Uthaviyai Maevi, Atainthu, Nee.
    - Kinjithamum

    Kignsithamum Nenjaee - கிஞ்சிதமும் நெஞ்சே Kignsithamum Nenjaee - கிஞ்சிதமும் நெஞ்சே Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.