Nirpandhamaana Manithan Naan Song Lyrics - Christking - Lyrics

    Nirpandhamaana Manithan Naan Song Lyrics


    நிர்ப்பந்தமான மனிதன் நான்
    இயேசுவே எனக்கு இரங்கிடுமே

    நான் செய்ய விரும்பாததை செய்கின்றேன்
    நான் பேசக் கூடாததை பேசுகின்றேன்
    நான் நினைக்கக் கூடாததை நினைக்கின்றேன்
    என்னை விடுவித்துக் காத்தருளும் என் இயேசுவே

    பரிசுத்தமாய் வாழ வாஞ்சிக்கிறேன்
    ஜெய வாழ்வு இன்னும் என்னில் இல்லையே
    உம் அக்கினி அபிஷேகம் என்னில் ஊற்றிடும்
    பரிசுத்தமாய் நானும் வாழ்ந்திடுவேன்

    என் சத்ருக்களை சிநேகிக்க முடியவில்லை
    என் ஜென்ம குணம் இன்னும் மாறவில்லை
    உம் அன்பை என்னுள்ளில் ஊற்றிவிடும்
    உமக்காய் சாட்சியாய் என்றும் வாழுவேன்

    என் பெலவீன நேரத்தில் சோர்ந்து போனேன்
    மற்றவர் வாய்ச் சொல்லால் மனம் உடைந்தேன்
    என் இயேசுவே நீர் சீக்கிரம் வாரும்
    உம்மோடு வாழவே வாஞ்சிக்கிறேன்

    பாவி என்று என்னை ஒதுக்கினார்கள்
    இப்பாவ உலகத்தில் அலைந்திருந்தேன்
    உம் அனாதி சினேகத்தால் இழுத்துக் கொண்டீர்
    உம் பிள்ளையாய் எனை மாற்றி வாழ்வளித்தீர்

    நான் சோர்ந்து தளர்ந்திட்ட வேளைகளில்
    தேற்றுவாரின்றி நான் கலங்குகையில்
    உம் மெல்லிய சத்தத்தால் என்னைத் தேற்றினீர்
    உம் சேவையில் நிலைத்திட உதவி செய்தீர்


    Nirppanthamaana Manithan Naan
    Yesuvae Enakku Irangidumae

    Naan Seyya Virumpaathathai Seykinten
    Naan Paesak Koodaathathai Paesukinten
    Naan Ninaikkak Koodaathathai Ninaikkinten
    Ennai Viduviththuk Kaaththarulum en Yesuvae

    Parisuththamaay Vaala Vaanjikkiraen
    Jeya Vaalvu Innum Ennil Illaiyae
    Um Akkini Apishaekam Ennil Oottidum
    Parisuththamaay Naanum Vaalnthiduvaen

    En Sathrukkalai Sinaekikka Mutiyavillai
    En Jenma Kunam Innum Maaravillai
    Um Anpai Ennullil Oottividum
    Umakkaay Saatchiyaay Entum Vaaluvaen

    En Pelaveena Naeraththil Sornthu Ponaen
    Mattavar Vaaych Sollaal Manam Utainthaen
    En Yesuvae Neer Seekkiram Vaarum
    Ummodu Vaalavae Vaanjikkiraen

    Paavi Entu Ennai Othukkinaarkal
    Ippaava Ulakaththil Alainthirunthaen
    Um Anaathi Sinaekaththaal Iluththuk Konnteer
    Um Pillaiyaay Enai Maatti Vaalvaliththeer

    Naan Sornthu Thalarnthitta Vaelaikalil
    Thaettuvaarinti Naan Kalangukaiyil
    Um Melliya Saththaththaal Ennaith Thaettineer
    Um Sevaiyil Nilaiththida Uthavi Seytheer

    Nirpandhamaana Manithan Naan Song Lyrics Nirpandhamaana Manithan Naan Song Lyrics Reviewed by Christking on December 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.