Oru Kodi Paadalgal Naan Song Lyrics - Christking - Lyrics

    Oru Kodi Paadalgal Naan Song Lyrics


    ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப்
    பாமாலையாக நான் சூடுவேன்
    உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன்
    புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்

    1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு
    விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2)
    அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து
    கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்…

    ஆதியும் நீயே அந்தமும் நீயே
    பாடுகிறேன் உனை இயேசுவே
    அன்னையும் நீயே தந்தையும் நீயே
    போற்றுகிறேன் உனை இயேசுவே

    2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில்
    மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2)
    என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில்
    எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)


    Oru Kotippaadalkal Naan Paaduvaen - Athaip
    Paamaalaiyaaka Naan Sooduvaen
    Ulakellaam Narseythi Naanaakuvaen - Unthan
    Pukalppaati Pukalppaati Naan Vaaluvaen

    1. Ilangaalaip Poluthunthan Thuthipaaduthae - Angu
    Virikinta Malar Unthan Pukalpaaduthae (2)
    Alai Oyaak Kadal Unthan Karunnai Manam - Vanthu
    Karai Serum Nurai Yaavum Kavithaich Saram (2) - Aathiyum…

    Aathiyum Neeyae Anthamum Neeyae
    Paadukiraen Unai Yesuvae
    Annaiyum Neeyae Thanthaiyum Neeyae
    Pottukiraen Unai Yesuvae

    2. Manaveennai Thanai Intu Nee Meettinaay - Athil
    Malarpaakkal Palakoti Uruvaakkinaay (2)
    En Vaalvum Oru Paadal Isai Vaenthanae - Athil
    Elum Raakam Ellaam Un Pukal Paaduthae (2)

    Oru Kodi Paadalgal Naan Song Lyrics Oru Kodi Paadalgal Naan Song Lyrics Reviewed by Christking on December 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.