Parama Vithiya Arumai Song Lyrics - Christking - Lyrics

    Parama Vithiya Arumai Song Lyrics


    பரம வைத்தியா அருமை ரட்சகனே பிணிதீர்க்கும்
    வைத்தியப் பணியினை ஆசீர்வதியும் ஐயனே

    பிணியாளிக்கு நம்பிக்கை தாருமே – மருந்தோடே உமது
    பேரதிசய கிருபை கூருமே

    உள்ளக் கனிவோடுழைக்கும் வைத்தியர்க்கும் – அவருடன் துணைநின்று
    உதவும் தொண்டர்கள் யாவர்க்கும் இரங்கும்

    சயமும் சுரமும் பயமுறுத்துமே – இதைத் தடுத்திடக் கொடை
    தரும் பெரியோரைப் பெருகச் செய்யுமே

    அரிய நூதன முறைகள் காணவே – ஆராய்ச்சிகள் செய்யும்
    அறிஞரால் புது வழிகள் தோன்றவே

    ஜெபத்தைக் கேட்கிற தேவன் நீரல்லவா? எங்கள் ஜெபத்தினால் சுகம்
    ஜெகத்தில் பரம்பச் செய்யும் வல்லவா


    parama vaiththiyaa arumai ratchakanae pinnitheerkkum
    vaiththiyap panniyinai aaseervathiyum aiyanae

    pinniyaalikku nampikkai thaarumae – marunthotae umathu
    paerathisaya kirupai koorumae

    ullak kanivodulaikkum vaiththiyarkkum – avarudan thunnainintu
    uthavum thonndarkal yaavarkkum irangum

    sayamum suramum payamuruththumae – ithaith thaduththidak kotai
    tharum periyoraip perukach seyyumae

    ariya noothana muraikal kaanavae – aaraaychchikal seyyum
    arinjaraal puthu valikal thontavae

    jepaththaik kaetkira thaevan neerallavaa? engal jepaththinaal sukam
    jekaththil parampach seyyum vallavaa

    Parama Vithiya Arumai Song Lyrics Parama Vithiya Arumai Song Lyrics Reviewed by Christking on December 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.