Parisuthar Kootam Naduvil Song Lyrics - Christking - Lyrics

    Parisuthar Kootam Naduvil Song Lyrics


    பரிசுத்தர் கூட்டம் நடுவில்
    ஜொலித்திடும் சுத்த ஜோதியே
    அரூபியே இவ்வேளையில்
    அடியார் நெஞ்சம் வாரீரோ

    மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
    கல் தின்ன கொடுக்கும் பெற்றோர் உண்டோ
    பொல்லாதோர் கூடச் செய்திடார்
    நற்பிதா நலம் அருள்வார்

    சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
    விரும்பா அசுத்தம் யாவும் நீக்குமே
    பாவி நீச பாவி நானையா
    தேவா இரக்கம் செய்யமாட்டீரோ

    பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
    யாரும் காணா உள் அலங்கோலத்தை
    மனம் நொந்து மருளுகின்றேன்
    பரிசுத்தம் கெஞ்சுகின்றேன்

    துணை வேண்டும் தகப்பனே உலகிலே
    என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே
    என் ஜீவன் எல்லையெங்கிலும்
    பரிசுத்தம் என எழுதும்


    Parisuththar Koottam Naduvil
    Joliththidum Suththa Jothiyae
    Aroopiyae Ivvaelaiyil
    Atiyaar Nenjam Vaareero

    Meen Kaettal Paampai Arulvaar Unntoo
    Kal Thinna Kodukkum Pettar Unntoo
    Pollaathor Koodach Seythidaar
    Narpithaa Nalam Arulvaar

    Suththam Virumpum Suththa Jothiyae
    Virumpaa Asuththam Yaavum Neekkumae
    Paavi Neesa Paavi Naanaiyaa
    Thaevaa Irakkam Seyyamaattiro

    Paarum Thanthaiyae Enthan Ullaththai
    Yaarum Kaannaa Ul Alangalaththai
    Manam Nonthu Marulukinten
    Parisuththam Kenjukinten

    Thunnai Vaenndum Thakappanae Ulakilae
    Ennai Ethirkkum Sakthikal Pala Unntae
    En Jeevan Ellaiyengilum
    Parisuththam Ena Eluthum

    Parisuthar Kootam Naduvil Song Lyrics Parisuthar Kootam Naduvil Song Lyrics Reviewed by Christking on December 18, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.