Maravaamal - மறவாமல் | Aarthi Edwin - Christking - Lyrics

    Maravaamal - மறவாமல் | Aarthi Edwin


    மறவாமல் நொடியும் விலகிடாமல்
    என் கரங்கள் பற்றிகொண்டீரே !
    மறவாமல் நொடியும் விலகிடாமல்
    மார்போடு அனைத்துக் கொண்டீரே!

    நிகரில்லா சிலுவையின் அன்பதை மறந்து,
    நிலையில்லா உலகினை என் கண் தேட..
    உலகின் மாயைகள் என்னை வந்து நெருக்க,
    அழையா குரல் ஒன்று என்னை வந்து தேற்ற.,

    எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்
    உலகின் ஆச்சர்யங்கள் அற்பமானதே !!

    அணு முதல் அனைத்தும் உம் வார்த்தையாலே இயங்க
    அற்பன் எனக்காய் ஏங்கி நின்றீரே..
    அழுக்கும் கந்தையுமாய் அலைந்து திரிந்த என்னை..
    அளவற்ற அன்பாலே அள்ளி அணைத்தீரே..

    உடைந்த உள்ளம் உம்மிடத்தில் தந்தேன்,
    உருமாற்றி என்னை உயர்த்தி வைத்தீர்!!
    ஏதுமில்லை என்று கை விரித்து நின்றேன்..
    எல்லாம் நீரே என உணரச்செய்தீர் !!

    எனக்காய் ஏங்கும் உந்தன் அன்பை உணர்ந்தேன்..
    உலகின் ஆச்சர்யங்கள் அற்பமானதே !!

    மறவாமல் நொடியும் விலகிடாமல்
    மார்போடு அணைத்துக்கொண்டீரே !!

    Maravamal Noadiyum Vilakitamal
    En Karangal Patrikondirea
    Maravamal Noadiyum Vilakitamal
    Marbotu Anaithu Kotirae

    Nikarila Siluvai Anbadhai Marathu
    Nilaiyilla Ullaikenai en Kan Dita
    Ullaken Mayai Ennai Vanthu Neeruka
    Alaiya Kural Onru Ennai Vanthu Theritra

    Enakai Yenkum Unthan Anbai Unarthean
    Ullakian Aacharigaal Arupananathe-2

    Anumuthal Anaithum Um Vaarthaiyala Iyanga
    Arpan Ennakai Yengi Nendrirea
    Alukum Kanthai Yumai
    Alanthu Therintha Ennai
    Alavaarae Anbalaya Alli Anaethera
    Udanthai Ullam Umidamidathil Thandhen
    Urumatrii Ennai Uyarthi Vaitheer
    Yethumillai Endru Kaivirithu Nindren
    Ellam Neerae Ena Unarachaitheer

    Enakai Yenkum Unthan Anbai Uunarthean
    Ullakian Aacharigaal Aripananathe-2

    Maravamal Noadiyum Vilakitamal
    En Karangal Patrikondirea


    Maravaamal - மறவாமல் | Aarthi Edwin Maravaamal - மறவாமல் | Aarthi Edwin Reviewed by Christking on October 20, 2021 Rating: 5

    No comments:

    Powered by Blogger.